districts

img

பொது பயன்பாட்டிற்கு நிலம் தந்தவர் காலமானார்

அவிநாசி, டிச. 25- அவிநாசி அருகே வடுக பாளையம், காட்டுவளவு பகுதி மக்களுக்கு தண்ணீர் தொட்டி கட்ட  இடத்தை தானமாக வழங்கிய அருக்காணி அம்மாள் வெள்ளி யன்று காலமானார். பொதுப் பயன்பாட்டிற்கு நிலம் தந்து மக்கள்  மனதில் இடம் பிடித்தவர் என மார்க்சிஸ்ட் கட்சியினர் புகழாரம் செலுத்தியுள்ள்ளனர். அவிநாசி ஒன்றியம், வடுக பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவளவு கிராமத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1997ஆம் ஆண்டு முதல் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக  2 கிலோமீட்டர் தூரம்  சென்று வடுகபாளையம் மற்றும் அய்யம்பாளையம் ஆகிய ஊர் களில் இருந்து குடிநீர் பிடித்து  வந்தனர். இதனால் மக்கள் வேலை க்கு செல்ல முடியாமலும், வரு மானம் இழந்தும் குடிநீருக்காக பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் ஒரு மேல்நிலைத் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என்று கோரிக்கையை கிராம மக்கள் வலியுறுத்தினர். இக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந் தனர். இதனையடுத்து, காட்டு வளவு கிராம மக்கள், அவிநாசி யில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு ஆடு, மாடுகளுடன் உண்ணாவிரத போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது..

இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த அதி காரிகள் ஊராட்சி ஒன்றிய பொது  நிதியிலிருந்து காட்டுவளவு கிரா மத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தோக்க தொட்டி கட்ட நிதி  ஒதுக்குவதாக ஒப்புக்கொண்டனர்.  இதையடுத்து மேல்நிலை தொட்டி கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய அதிகாரிகள் காட்டுவளவிற்கு ஆய்வு செய்த போது,  ரிசர்வ் சைட் எங்கும் இல்லாத காரணத்தினால் திரும்பி சென்றனர். இதனால், மேல்நிலை தொட்டி கட்ட வாய்ப்பில்லாத நிலை உருவானது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு குடும்பத்தை சேர்ந்த, கூலி தொழி லாளர்களான அருக்காணி, ரங்க சாமி, பழனிசாமி, சுப்பிரமணி ஆகி யோர் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் இரண்டு சென்ட் இடத்தை தானமாக வழங்க முடிவு  செய்தனர். இந்த இடத்தை 2007 ஆம்  ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி யன்று தானமாக எழுதிக் கொடுத் தனர். இதையடுத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு, குடி நீர் தேவையை இன்றளவும் பூர்த்தி  செய்து வருகிறது. தனக்கு சொந்த மான நிலத்தை கிராம மக்களின்  நலனுக்காக எந்த பிரதி பலனும் பாராமல் பொது பயண் பாட்டிற்காக நிலத்தை தானமாக கொடுத்த அம்மையார் அருக் காணி வெள்ளியன்று காலமானார். அருக்காணி அம்மாளின் மறைவு செய்தியறிந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காட்டுவளவு ஊர் பொது மக்கள் திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.