அவிநாசி,டிச.20- பழுதடைந்த சாலையை சீரமைத்திட வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு கொடுத்து மசியாத நிலையில், மறியல் போராட்டத்திற்கு அறிவிப்பு விட்ட பிறகு, சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிற நிலையில், தாங்களால் தான் சாலை சீரமைக்கப்படுகிறது என்கிற தோற் ்றத்தை உருவாக்க பாஜக மறியல் நாடகத்தை கண்டு ஊர் மக்கள் சிரிப்பாய் சிரித்து ரசித்தனர். அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களம் சாலை பிரிவிலி ருந்து கருணைபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் புறவழிச்சாலை வழி யில் குடிநீர் குழாய் பதித்ததினால் சாலை மிக வும் பழுதடைந்தது. இந்நிலையில் அப்பகு தியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன் தலைமையில், பொதுமக்கள் திரண்டு சாலையை சீரமைத்திட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஜூலை 4 தேதி கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவின் மீது எவ்வித நடவடிக்கை எடுக் காத நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி சாலை மறியல் போராட் டத்திற்கு அறைகூவல் விடுத்து, பொதுமக் களை திரட்டும் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட னர். இதனையறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி கள், உடனடியாக சாலை பணிகள் அமைப்ப தற்கு பூமி பூஜை போட்டனர். இருப்பினும், சாலைப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றதைய டுத்து, விரைந்து முடிக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பிலும் சுவரொட்டிகள் அப்ப குதி முழுவதும் ஒட்டப்பட்டது. இதனையடுத்து, இப்பணிகள் வேகமெடுத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதனன்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திட்ட இயக்குனர் உள்ளிட்டோர் கருணைபாளையம் சாலையை கடந்து கவுண் டம்பாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்க வருகிறார் என்பதையறிந்த பாஜகவினர், சாலை சீரமைக்க வேண்டும் என மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக திடீர் அறிவிப்பை செய்தனர். ஆனால், அமைச்சரின் வாகனம் அப்பகுதிக்கு வந்து மக்களிடம் மனுக் களை வாங்கிச்செல்லும் வரையில் பாஜகவினர் மூச்சைக்கூட விடவில்லை. பின்னர், மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். கடுப்பான காவல்துறையினர், மறியல் செய்தால் கைது செய்வோம் என எச்சரித் ததையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு நகர்ந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் சாலை பணிகள் துவங்கியதை அப்பகுதி மக்களும் அறிந்திருந்த நிலையில், யார் பெத்த பிள்ளைக்கு யார் பேர் வைப்பது என பாஜகவினரின் திடீர் சாலை மறியல் பாசப்போராட்ட நாடகத்தை கண்டு சிரிப்பாய் சிரித்து நகர்ந்தனர்.