districts

img

“அழையா விருந்தாளியாக வந்த பாம்பு, 2 குழந்தைகளை தீண்டிடுச்சு” - - ஜி.லெனின் -

ஒகேனக்கல் அருகே உள்ள மஞ்ச காயகுடம்பு பகுதியில் வசிக்கும் இரு ளர் இன மக்கள், அடிப்படை வசதிக ளின்றி தவித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம்  வட்டம், ஊட்டமலை ஊராட்சி, ஒகே னக்கல் அருகே   மஞ்சகாயகுடம்பு இரு ளர் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார்  36 இருளர் குடும்பங்கள் மலையடி வாரத்தில் கரடுமுரடான பகுதியில் குடிசை அமைத்து சுமார் 10 வருடத் திற்கும் மேல் வசித்து வருகின்றனர். இருளர் இன மக்கள் இங்கு குடியேறு வதற்கு முன், ஒகேனக்கல் அருகே  உள்ள வனப்பகுதியில் தொட்டிப்பள் ளம், அலங்காடு பகுதியில் சுமார் மூன்று தலைமைமுறையாக கல்சந்து களில் குடும்பம் குடும்பமாக குடியி ருந்து வந்தனர். அங்கு கிடைக்கும் கிழங்குகளை சாப்பிட்டு அங்கேயே ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். வனத்திலிருந்து தேன், கடுக்காய் போன்ற மருந்துப் பொருட்களை சேகரித்து வந்தனர். வெளி உலகம் தெரியாமல் வனத்தின் உள் வாழ்ந்த இம்மக்களை வனத்துறையினர் வனத்தினுள் இருக்கக்கூடாது என  தொடர்ந்து கெடுபிடி காட்டி வந்த னர். இதனையடுத்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் கள் இவர்கள் வசிக்கும் பகுதிக்கு  சென்று, மக்களுடன் கலந்துரையாடி ஒகேனக்கல் அருகே மஞ்சகாய குடம்பு பகுதியில் இம்மக்களை குடிய மர்த்தினர். தொடர்ந்து ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட் டுமனை உள்ளிட்டவைகளை அவர்களுக்கு தமிழ்நாடு மலைவாழ்  மக்கள் சங்கம் போராடி பெற்றுந் தந்தது. இவர்கள் குடியிருக்கும் கரடு, முரடாக இருந்த பகுதியை சமன்  செய்து அங்கு குடிசை அமைத்து வாழ்ந்து வரும் இருளர் இன மக்கள்,  எந்தவித அடிப்படை வசதிகளும் இல் லாமல் வாழ்ந்து வருகின்றனர். மேலும், குடியிருப்பு அருகே ஒகேனக் கலில் உள்ள அனைத்து வகையான  குப்பைகளும் மலைபோல் குவித்து  வைக்கப்பட்டுள்ளன. இதனால் அடிப் படை வசதிகள் மட்டுமின்றி, சுகாதார மின்றி வாழ்ந்து வருகின்றனர்.

அழையா விருந்தாளிகள்!

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாஸ்கராணி கூறுகையில், “கடந்த 2 மாசத்திற்கு முன்பு குடிப்ப தற்கு ஆழ்துளை கிணறு போடப்பட் டது. ஆனால், தண்ணீர் மஞ்சள் நிறத் தில் வருகிறது. இதற்கு காரணம், குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை மலைதான். இந்த தண்ணீரை குடிப்ப தால் மஞ்சள்காமலை, வைரஸ்காய்ச் சல் ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே,  ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்”, என்றார். “நாங்கள் இதற்கு முன்பு தொட்டிப் பள்ளம் வனப்பகுதியில் இருந்தோம். மஞ்சகாயகுடம்பு பகுதிக்கு வந்து ‘டென்ட்’ அமைத்து குடியிருந்து வருகி றோம். எனக்கு 3 குழந்தைகள். இரவு நேரத்தில் திடீரென்று அழையா விருந் தாளிகளாக குடிசைக்குள் வரும்  பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங் களுக்கு மத்தியில் நாள்தோறும் பயத் துடன் வாழ்ந்து வருகிறோம். மழை  வந்தால் குடிசைக்குள் தண்ணீர் வந்து விடும். இப்படி பல சிரமங்களை அனு பவித்து வரும், எங்களுக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டும்” என மணி என் பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலைவாழ் சங்க தலைவர்கள் ஆய்வு

“நாங்கள் மூன்று தலைமுறை யாக வனப்பகுதியில் வசித்து வந் தோம். தற்போது வெளியே (மஞ்சகாய குடம்பு பகுதி) வந்தும் வனத்துல இருக் கிறமாதிரிதான் இருக்குது. இங்கு எந்த  வசதியும் இல்ல. 2 குழந்தைங்கள பாம்பு தீண்டிடுச்சி. நாங்க வனத் துக்கு சென்று தேன் உள்ளிட்ட பொருட் களை சேகரித்து ஒகேனக்கல்லில் விற் போம். இப்ப காட்ல எங்கள பாரஸ்ட் காருங்க அனுமதிக்கிறதுல்ல. எங்க ளுக்கு 100 நாள் வேலையும் கொடுக் கிறதில்ல, நாங்க தினமும் சாப் பிடவே கஷ்டப்படுகிறோம்” என வேத னையுடன் செல்வம் என்பவர் கூறி யுள்ளார். இதனிடையே தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்  தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டச்  செயலாளர் கே.என்.மல்லையன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாரிமுத்து ஆகியோர் மஞ்சகாய குடம்பு இருளர் குடியிருப்புபகுதிக்கு நேரில் சென்று அந்த மக்களிடம் கலந்துரையாடினர். அப்போது அவர் களின் தேவை குறித்து சங்க தலை வர்களிடம் தெரிவித்தனர்.

பழங்குடியின மக்களின் அரண்

இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டங்களில் மலை யாளி பழங்குடியின மக்களும், பென் னாகரம் மற்றும் பாலக்கோடு வட்டங்க ளில் இருளர் பழங்குடி மக்களும் கணிச மாக உள்ளனர். மஞ்சகாயகுடம்பு பகு தியில் வசித்து வரும் இருளர் இன  மக்களுக்கு குடிநீர், சாலை, மின்சா ரம் வசதிகள், பாலர் பள்ளி, அரசு வழங் கும் வீடு உள்ளிட்டவையும், வனத்தில்  உள்ள பொருட்களை சேகரிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மேலும், சிட்லிங் ஊராட்சி யில் மலையாளி பழங்குடி மக்களின் நிலத்தை, சேலம் பகுதியைச் சேர்ந்த  மாற்று சமூகத்தினர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அபகரித்துள்ளனர். அந்த நிலங்களை மீட்டுத்தர வேண் டும். மேட்டுப்பட்டி பழங்குடி மலை யாளி மக்களுக்கு சாலை வசதி, ஆல மரத்துப்பட்டி மற்றும் நொனங்கனூர் ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு மற்றும் அதற்கான சாலை அமைத்துத் தர வேண்டும். மூலபெல்லூர் இருளர் இனமக்களில் வீடு இல்லாதவர் களுக்கு அரசு வீடு வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கணிசமாக வாழ்ந்துவரும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத் தேவைகளுக்காகவும் மலைவாழ் மக்கள் சங்கம் போராடி வருகிறது. பழங்குடி மக்கள் பாதிக்கப்படும் பொழுதும் தாக்கப்படும் பொழுதும் அவர்களை மீட்டு, பாதுகாப்பு அரணா கவும், விடிவெள்ளியாகவும் தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கம் திகழ்கிறது,  என்றார். அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடுக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு கூறுகையில், மஞ்சகாயகுடம்பு  பகுதியில் உள்ள இருளர் மக்களுக்கு  நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, சட்டமன்றத்தில் பேசி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தில் தற்போது 13 குடும்பங் களுக்கு தலா ரூ.5.20 லட்சம் மதிப் பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. மேலும், 13 வீடு கள் அரசு கட்டித்தர வேண்டும். புதிய தாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டில்  கழிப்பறை மட்டுமே சிறிய அளவில்  உள்ளது. குழியல் அறை இல்லை.  எனவே, குழியல் அறை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். இந்த குடியிருப்புக்கு தேவை யான குடிநீர், மின்சாரம், சாலை  உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டும், என்றார்.