districts

img

உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்ட முகாம் ஆட்சியர் புறப்பட்டதால் அவிநாசி மக்கள் ஏமாற்றம்

அவிநாசி, ஜன.29 – அவிநாசியில் வட்டாட்சியர் அலுவல கத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத் தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர்  பங்கேற்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதனன்று உங்களைத் தேடி, உங்கள் ஊர்  திட்டத்தில் முகாம் நடைபெறும். இதில்  மாவட்ட ஆட்சியர் பங்கேற்று ஆய்வு மேற் கொள்வார் என அறிவிப்பு வெளிவந்தது.  ஆனால் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் ஆய்வுக் கூட்டம் முடித்தவுடன், மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு வந்து 15 நிமிடம் மட்டுமிருந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுவிட்டு புறப் பட்டுச் சென்றுவிட்டார். இந்நிலையில் டிஆர்ஓ அரை மணி நேரம்  மட்டும் மனுக்களை வாங்கிவிட்டு அவரும்  சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் பலர் மனு கொடுக்க வந்த நிலையில்,  மாவட்ட ஆட்சியரும், டிஆர்ஓவும் இல்லாத தால், வட்டாட்சியர் மனுக்கள் வாங்கினார். இதனால் பொதுமக்கள் பலரும் மாவட்ட ஆட் சியர் மனுவை வாங்கி துறை சார்ந்த அதிகா ரிக்கு அனுப்புவார்கள் என நம்பி வந்தவர் கள் ஏமாற்றம் அடைந்தனர்.