இளம்பிள்ளை, ஜன.11- உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயி கள் முடிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரியில் உயர் மின் கோபுரத்திற்கு எதிரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் ஆலோசனைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க சங்ககிரி தாலுகா செயலா ளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில், விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013 இன் படி தற்போது உள்ள சந்தை விலைக்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோல், விளை நிலங்களில் உள்ள கிணறு, போர்வெல் பாதிக்கப்பட்டால் அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப் படும் என சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியினை திமுக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். தேவூர் துணை மின்நிலையத்திலிருந்து எடப்பாடி வட்டம், குரும்பம்பட்டி துணை மின் நிலை யம் வரை 110 கேவி உயர் அழுத்த மின்கோ புரம் விவசாய நிலங்களில் அமைக்க கூடாது. இத்திட்டத்தை விவசாய நிலங் களை பாதிக்காமல் கேபிள் மூலம் நெடுஞ் சாலை வழியாக அல்லது சரபங்கா நதிக் கரை அருகே உள்ள நிலத்தின் அடியில் கேபிள் மூலம் பதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்கல் பண்டிகைக்குப் பிறகு சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் முனுசாமி, சேலம் மாவட்ட பொறுப்பாளர் ஏ. ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்ட பொறுப்பா ளர் பி.பெருமாள், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் விவசாய சங்க பொறுப்பா ளர் செல்லமுத்து, ஜலகண்டாபுரம் விவசாய சங்க செயலாளர் சுரேஷ் உட்பட உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி கள் பலர் கலந்து கொண்டனர்.