districts

img

மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் மறியல்

நாமக்கல், ஜூலை 5- குமாரபாளையம் அருகே மயானத்திற்கு செல்லும் பாதையின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியு றுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், தட்டாங்குட்டை  ஊராட்சி, ஓலப்பாளையம் கிராமம் அருகே கோம்புபள்ளம் உள்ளது. சுமார் 20 அடி அகலம் கொண்ட இப்பள்ளத்தில் வெள்ள நீர் போக்கி மற்றும் பாசத்திற்கான கிழக்குக்கரை கால்வாய் பாசனத்திற்கும் பெரும் உதவியாக இருந்து வந் தது. ஓலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நூறாண்டு களுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல, இந்த ஓடை அருகே உள்ள பாதையை பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது இப்பாதையை அடைத்து சந்திரசேகர் என்பவர் வேலி  அமைத்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் சந்திரசேகரி டம் கேட்டபொழுது, அது தனக்கு சொந்தமான இடம்  என்றும், பட்டா தனது பெயரில் உள்ளது என்றும் தெரி வித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த கிராமமக்கள் வெள் ளியன்று குமாரபாளையத்தில் இருந்து தேவூர் செல்லும் சாலையில், ஓலப்பாளையம் பிரிவு பகுதியில் சாலை மறிய லில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, பிரச்ச னைக்குரிய அந்த இடத்தை, வருவாய்த்துறை அதிகாரி களை வரவழைத்து அளந்து, நிலம் அரசு நிலமா, அல்லது  தனிநபருக்கு உரியதா? என பொதுமக்களிடம் தெரிவிக்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் பொது மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.