தாராபுரம், பிப், 25- கட்டிட வரைபட அனுமதி வழங்க கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவர் 1 லட்சம் லஞ்சம் கேட்டு அலைக்கழிப் பதாக கூறி, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் தனது குடும்பத் துடன் போராடி கொண்டிருந்த முதிய வர் ஒருவர் தலையில் மண்ணெண் ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகசாமி (65) என்ற நபர் தனது மகள் பூமதி (32) உறவினர் பகவதி அம்மாள் (62) ஆகியோருடன் ஊராட்சி ஒன்றிய அலுவலக முகப்பு பகுதியில், கவுண்டச் சிபுதூர் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரின் செயல்களை கண்டிப்பதாக கூறி எழுதப்பட்ட பதாகை களை கைகளில் பிடித்தவாறு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டு கொண்டிருந்தார். தனது கோரிக் கைகளை அரசு அதிகாரிகள் நிறைவேற் றாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக கூறிக் கொண்டிருப்பதாக தாராபுரம் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தாராபுரம் காவ லர் அங்கு சென்றனர். அப்போது திடீ ரென தான் எடுத்து வந்திருந்த மண் ணெண்ணெயை எடுத்து தனது தலை மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்த காவலர்கள் விரைந்து சென்று முதியவரை தடுத்து நிறுத்தி அவரை அழைத்துச் சென்று தலை யில் தண்ணீர் ஊற்றினர்.
இது குறித்து தீக்குளிக்க முயற்சி செய்த முருகசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட் சிக்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் எனது தோட்டத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். சாலை யோரம் உள்ள எனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக கவுண் டச்சி புதூர் ஊராட்சி தலைவர் செல்வி, ஊராட்சி செயலாளர் ஆகியோரை அணுகி வரைபடம் அனுமதி கேட் டேன். 1 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே வரைபட அனுமதி வழங்க முடியும் என்று கூறி என்னை பலமுறை அலைக்கழித்து வருகிறார்கள். எங்க ளைப் போன்ற ஏழை விவசாயிகளிடம் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டால் நாங்கள் என்ன செய்வோம். எனக்கு சொந்த மான இடத்தில் எனது பணத்தில் நான் வீடு கட்ட இவர்களுக்கு எதற்காக பணம் கொடுக்க வேண்டும். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் இந்த முடிவை எடுத்தேன் எனத் தெரி வித்தார். தாராபுரம் காவலர்கள் அவரை சமா தானம் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் கள் கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவர் செல்வியை கைப்பேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தகவல் கூறி யும் அவர் வரவில்லை. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.