திருப்பூர், ஏப்.1- காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு, சத்துணவு திட்டத் தில் இணைத்திட வலியுறுத்தி தமிழ்நாடு சத்து ணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட் டமைப்பு சார்பில் சனியன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சத்துணவு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியு றுத்தி ஜன.3 ஆம் தேதி சென்னையில் தமிழ் நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, மகளிர் மற்றும் சமூக நலத் துரை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த் தைக்கு அழைத்து கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் கூறி, வரும் பட்ஜெடில் அறி விக்க வழிவகை செய்யப்படும் என்று தெரி வித்தார். இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடரில் சத் துணவு ஊழியர்களின் கோரிக்கைகளான, சத் துணவு அங்கன்வாடி திடங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் ரூ. 6750 மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண் டும். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து துரைகளிலும் உள்ள காலிப்பணி யிடங்களில் 50 சதவிகித பணியிடங்களை ஒதுக்கி அதில் தகுதி வாய்ந்த ஊழியர்க ளுக்குப் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதை கண்டித்தும், மேலும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில், தமிழ் நாடு முழுவதும் கண் ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டிருந்தது. அதன்படி, கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட இணை கன்வீனர் எம்.பாக் கிய தலைமையில் திருப்பூரில் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங் கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கே.மாவளப்பன் துவக்க உரை யாற்றினார். மாவட்டச்செயலாளர் ஆர். நாகராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். மாநில துணைத்தலைவர் வி.குப்பு சாமி, மாவட்ட தலைவர் கோ.முத்தமிழ்ராஜ், வட்ட கிளை தலைவர் பி.மகுடேஸ்வரன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். மாநிலச்செயலாளர் பி.ரீட்டா நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் எஸ்.சுசீலா நன்றி கூறி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அங் கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.