தருமபுரி, நவ.10- தருமபுரி அருகே, மின்சார வாரியத் தின் அலட்சியத்தால் பட்டதாரி விவ சாயி மின்சாரம் தாக்கி பலியாகி உள் ளார். தருமபுரி மாவட்டம், கோணங்கி ஹள்ளி அருகே உள்ள அண்ணாநகர் பகுதி சேர்ந்தவர் முனுசாமி. பட்டதாரி யான விவசாயியான இவருக்கு செல்வி என்ற மனைவியும், இரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இவர் தன்னு டைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் ஆடு, மாடுகள் வளர்த்து, அதில் கிடைக் கும் குறைந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். பட்டதாரியான முனுசாமி அரசு குரூப் தேர்வுக்கு முயற்சி செய்து வந்துள்ளார். முனுசாமி தன்னுடைய விவசாய நிலத்திற்கு பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக கடந்த மூன்று மாத கால மாக மின் மோட்டாரை அதிகளவில் பயன்படுத்தவில்லை. பூந்தோட்ட மின் இணைப்பிற்கு மின் கட்டணம் செலுத்த வில்லை. இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள், முனுசாமியின் தோட்டத் திலிருந்த மின் இணைப்பினை கடந்த 20 நாட்களுக்கு முன் துண்டித்துள்ளனர். இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்பட்டதால், உறவினர்களிடம் கடன் வாங்கி மின் கட்டணம் மற்றும் அப ராத தொகையை திங்கட்கிழமை செலுத் தியுள்ளார்.
இந்நிலையில், பயிர்கள் வாடு வதினாலும், கால்நடைகளுக்கு தண் ணீர் தேவைப்படுவதாலும் மின்வாரிய ஊழியரிடம், “மின் கட்டணத்தை அபரா தத்துடன் செலுத்தி விட்டேன். ஆகை யால் மின் இணைப்பு கொடுங்கள்” என கேட்டுள்ளார். அதற்கு அப்பகுதியை சேர்ந்த மின் வாரிய ஊழியர், தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடி யாக வர முடியாது. ஒரு வாரம் ஆகும் என கூறியதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. மேலும், உங்களுக்கு அப் படி உடனே தேவை என்று இருந் தால் நீங்களே மின் இணைப்பினை செய்து கொள்ளுங்கள் என கூறியதாக வும் தெரிவிக்கின்றனர். இதனால் விவ சாய முனுசாமி, மின்சார ட்ரான்ஸ் பார்ம ரின் இயக்கத்தை நிறுத்திவிட்டு தன்னு டைய விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பினை கொடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது அந்த மின் இணைப்புக்கு மேலே உள்ள உயர்மின்னழுத்த கம்பி இணைப்பை கவனிக்காததால் முனுசாமி மீது மின்சா ரம் தாக்கியதால் மின் கம்பத்திலிருந்து தூக்கி கீழே வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர் ஏற் கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, மின்கட்டணம் செலுத்திய பின்பும் மின் இணைப்பு வழங்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட மின் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்க்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முனு சாமியின் மனைவி கோரிக்கை விடுத் துள்ளார்.