districts

img

ஜல்... ஜல்... எனும் சலங்கை ஒலி - ச.நல்லேந்திரன்

“ஜல்... ஜல்... எனும் சலங்கை ஒலி
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே”
 

இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் பாசம். பாடலை இயற்றியவர் மருதகாசி. பாடலைப் பாடிய வர் எஸ்.ஜானகி. பாடலைக் கேட்டால் உற்சாகம் பொங்கும். இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளில் ஈடு பட்டுவரும் சலங்கை மணிகள் தயாரிக்கும் தொழி லாளர்களின் வேலைப்பாடையும் வாழ்க்கைப் பாடையும் அறிந்தால் மனதை சோகம் கவ்வும். தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் மட்டுமே வழி கிடைக்கிறது காளை களுக்கு காலில் கட்டும் சலங்கை மணிகளை தயா ரிக்கும் தொழிலாளர்களுக்கு. ஜல்லிக்கட்டு சீசன் முடிந்துவிட்டால் அவர்கள் கூலி வேலைக்குத் தான் செல்ல வேண்டும். இந்த நிலை இன்றளவும் நீடிக்கிறது. சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்கும் மணிகள் தயாரிக்கும் பணி மும்முர மாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள், மஞ்சுவிரட்டு போட்டிகள், மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வீர விளை யாட்டுகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று.  ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். காளைகளை அடக்கும் காளையர்களும் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளை களை அலங்கரிக்க வித, விதமான மணிகளை அதன் கழுத்தில் கட்டுவார்கள். தற்போது காளைகளின் கழுத்தில் கட்டப்படும் மணிகள் தயாரிக்கும் பணி சிங்கம்புணரியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  சலங்கை மணிகள் தயாரிப்பது மிக நுட்ப மானது. இதை அவ்வளவு எளிதில் உருவாக்கிவிட முடியாது. இது குறித்து சிங்கம்புணரி அறிஞர் அண்ணா ஆர்ச் அருகில் வசித்துவரும் கருப்பையா மகன் பாலு என்பவர் கூறியதாவது:-இந்தக் கைத் தொழி லில் எங்களது மூதாதையர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வழியில் நாங்கள் இந்த கைத் தொழிலை மேற்கொண்டு வருகிறோம். இந்தத் தொழிலில் அருந்ததியர் சமூகத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இன்றைய நிலையில் சிங்கம்புணரியில் சுமார் 100 பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலுக்கான முதலீட்டை வட்டிக்கு கொடுப்ப வர்களிடமிருந்து பெறுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளை களின் கழுத்தில் இருந்து ஜல், ஜல் என்ற ஓசை யுடன் மணி ஒலிக்கும். பொதுவாக இங்கு ஜல்லிக் கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளின் வழிபாட்டிற்காகவும், போட்டியின் போது அந்த காளைகள் பாய்ந்து செல்லும் போது கழுத்தில் கட்டப்பட்ட இந்த மணி களின் இடையே ஏற்படும் ஒலியால் அந்த காளை கள் இன்னும் அதிவேகமாக செல்லும் என்பதால் காளை வளர்ப்பவர்கள் இந்த மணிகளை ஆர்வத்து டன் வாங்கிச் செல்கின்றனர். சலங்கை மணிகளுக்கு மூன்றுவிதமான மணி கள் பயன்படுத்தப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த வெங்க நாயக்கன்பட்டி, கும்பகோணம், சிவகங்கை மாவட்டம் அரியகுடி ஆகிய இடங்களிலிருந்து மணிகளைப் பெறுகிறோம்.

இதில் அரியகுடியில் விற்கப்படும் மணிகள் விலை உயர்ந்தது. மேலும் தோல் மற்றும் உல்லன் நூல்கள் தேவை. உல்லன் நூல்களை வாடிக்கையாளர்களின் விருப் பத்திற்கே டிசைன் செய்கிறோம். எல்லாம் கை வேலை தான். இந்தப் பணியில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபடுகின்றனர். பூ டிசைன்கள் தயா ரானதும் அதை லெதரில் மணிகளுக்கு இடையில் வைத்து தைக்கிறோம். நாளொன்றுக்கு ஐந்து சலங்கைகள் முதல் ஆறு சலங்கைகள் மட்டுமே தயாரிக்க முடியும். காளைகளின் உரிமையாளர்கள் அல்லது இதை மொத்தமாக வாங்கிச் செல்பவர்கள் எத்தனை மணி கள் வைக்க வேண்டுமெனக் கூறுகிறார்களோ அதற் கேற்றாற்போல் மணிகள் வைத்து தைப்போம். கன்றுக்குட்டிகளுக்கும் இந்த சலங்கை மணிகள் கட்டப்படுகின்றன. சீசன் காலத்தில் மொத்த சமூகத்தினரும் உழைத்தால் கூட உச்சபட்சமாக ஐந்தாயிரம் சலங்கை மணிகளுக்கு மேல் தயாரிக்க முடி யாது. இது நுட்பமான வேலை மட்டுமல்ல. கடின மான வேலையும் கூட. ஜல்லிக்கட்டில் நாங்கள் தயாரித்துக்கொடுத்த சலங்கை மணிகளை கட்டிக்கொண்டு ஓடிய காளை கள் பரிசு பெறுகின்றன. அது தான் எங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. கூட்டிக்கழித்துப் பார்த்தால் லாபம் என்பது “ஒரு மாத வயிற்றுச் சாப்பாடு” தான் என்றார்.