districts

img

தினசரி மார்கெட் கட்டிடம் கட்டும் பணி அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

திருப்பூர், மார்ச் 4- செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்  ஆகியோர் சனியன்று,  மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலை மையில் தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம் பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.203 லட்சம் மதிப்பீட்டில் புதிய  தினசரி மார்கெட் கட்டிடம் கட்டும் பணியினை துவக்கி வைத்த னர்.  திருப்பூர் மாவட்டம்,  தாராபுரம் நகராட்சியில் கலைஞர்  நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.203 லட்சம் மதிப்பீட் டில் 55 கடைகள், 1 பல்பொருள் அங்காடி, 1 உணவகம்  மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கூடிய புதிய  தினசரி மார்கெட் கட்டிடம் கட்டுவதற்காக பணியினை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  துவக்கி  வைத்தார். இதைதொடர்ந்து தாராபுரம் வட்டம்  வர்த்தக திருமண மண்ட பத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் சார்பில் 62  நபர்களுக்கு ரூ. 24.80 லட்சம் மதிப்பீட்டில்  விலையில்லா வீட்டுமனைப்பட்டாகளை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலக் குழுத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர் மன்ற தலை வர் கு.பாப்புகண்ணன், ஆணையாளர் வே.ராமர், வருவாய்  கோட்டாட்சியர் குமரேசன், நகராட்சி பொறியாளர் சண்முகவ டிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.