districts

img

புதிய நியாய விலைக் கடையை அமைச்சர் துவக்கி வைத்தார்

திருப்பூர், ஆக.31- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சியில் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். பரஞ்சேர்வழி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் கிராம  சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.64 கோடி மதிப்பீட் டில் 4 புதிய திட்டப்பணிகளையும் அவர் துவக்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற் றனர்.