districts

img

புதுப்பாளையம் கிராமசபையில் அமர்வதில் பாகுபாடு?

அவிநாசி, நவ.23 - அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட் சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமச பைக் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் தரை  விரிப்பில் கீழே அமர்ந்திருக்க, மற்றொரு தரப் பினருக்கு இருக்கைகள் போடப்பட்டு அதில்  அமர்ந்திருந்தனர். அத்துடன் அலுவலர் தாம தமாக வந்ததால் கிராமசபை நடத்தாமல் ரத்து  செய்யப்பட்டது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஊராட்சிமன்ற அலுவ லகத்தில் கிராமசபைக் கூட்டம்  நடைபெறும்  என அறிவிக்கப்பட்டிருந்தது. புதுப்பாளை யம் ஊராட்சியில் 6000க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். விதிமுறைப் படி இந்த கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக் கள் 200 பேராவது பங்கேற்க வேண்டும். ஆனால் பகல் 11 மணி அளவில் வெறும் 50- க்கும் குறைவான நபர்கள் மட்டுமே அங்கு  இருந்தனர். அதுவும், ஊராட்சி அலுவலகத் தில், கணினியில் பணியாற்றும் ஊழியர்கள்,  100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் நபர்களை அழைத்துக் கொண்டு, கூட்டத்தில்  அமர வைத்து அவர்களிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டிருந்தனர். கிராமசபை விதிமுறைப்படி, அனைவ ரும் தரை விரிப்பில்தான் அமர வேண்டும், யாரையும் பாகுபாடான முறையில் நடத்தக்  கூடாது. ஆனால் இங்கு நூறு நாள் வேலைத்  திட்ட பணியாளர்களை கீழே அமர வைத்தி ருந்தனர். அதேசமயம் சுமார் 10 பேர்  அங்கேயே இருக்கை போட்டு அமர்ந்திருந்த னர். இதனைத் தொடர்ந்து கிராம சபை நடத்து வதற்காக ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரி  பூங்கொடி மற்றும் ஊராட்சி செயலாளர் லோகநாதன் ஆகியோர் 11:30 மணியளவில்  வருகை தந்தனர். இதன் காரணமாக திமுக  பிரமுகர் சிவகுமார் கிராமசபைக் கூட்டத் திற்கு அதிகாரி தாமதமாக வந்ததைச் சுட்டிக் காட்டி, கூட்டம் நடத்தக் கூடாது என  எதிர்ப்பு  தெரிவித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலர் பூங்கொடி தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு  கோரினார். தனது வாகனம் பழுதடைந்ததால்  தாமதம் ஏற்பட்டது என்று கூறி ஒத்துழைப்புத்  தரும்படி வேண்டுகோள் விடுத்தார். இரு முறை மன்னிப்பு கோரியும், கூட்டம் நடத்தக்  கூடாது என ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் பிடி வாதமாக மறுத்துவிட்டார். இதையடுத்து கிராமசபைக் கூட்டம் நடத் தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு மற்றொரு தேதியில் கூட்டத் தேதி அறிவிக்கப்படும் என  ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பிரியா அறிவித்தார். இதனால் கிராமசபைக் கூட் டம் நடைபெறாமல் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.