திருப்பூர், ஜூன் 2- திருப்பூர், வெள்ளியங்காடு 60 அடி சாலை சீரமைப்பு பணி 15 தினங்களில் செய்து முடிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் உறுதி யளித்தார். திருப்பூர் - தாராபுரம் சாலையிலிருந்து வெள்ளிங்காடு வழி யாக முத்தையன் கோவில் வரை செல்லக்கூடிய 60 அடி சாலையில் மாநகராட்சி சார்பில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. எனினும் இப்பணி மிகவும் மெதுவாக நடைபெற்று வந்த நிலையில், சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மக்கள் பயணிக்க முடியாதபடி மோசமாக இருக் கிறது. எனவே, இச்சாலையில் தோண்டிப்போட்ட பகுதி களில் பணிகளை முடித்து, உடனடியாக சாலையை முழுமை யாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியு றுத்தி வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பய ணம் செய்கின்றனர். எனவே இந்த சாலையை உடனடி யாக சீரமைக்க வலியுறுத்தி வெள்ளியன்று (நேற்று) ஆர்ப் பாட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வெள்ளியங்காடு பகுதி கிளைகள் அறிவித்திருந்தன. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக மேயர் ந.தினேண் குமார் மார்க்சிஸ்ட் கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத் தார். இதில், கட்சியின் தெற்கு மாநகர செயலாளர் த.ஜெய பால், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன், கோ.பொம்மு துரை, த.ஆறுகுட்டி, வெள்ளியங்காடு கிளை செயலா ளர்கள் ப.ரமேஷ், பெ.கதிரேசன் உள்ளிட்டோர் மேயரை, அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது 15 தினங் களுக்குள் வெள்ளியங்காடு சாலைப் பணியை முடித்துக் கொடுப்பதாக மேயர் உத்தரவாதம் அளித்தார். இதனால், வெள்ளியங்காடு நால்ரோட்டில் நடைபெற இருந்த ஆர்ப்பாட் டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.