districts

img

“சி.வி.சண்முகத்திற்கு நாவடக்கம் வேண்டும்” மார்க்சிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்

சேலம், நவ.5- அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண் டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கடந்த அதிமுக ஆட்சியின் போது தூத்துக்குடி ஸ்டெர் லைட் துப்பாக்கிச் சூடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டார். அதில், “அதிமுக ஆட்சியின்போது ஸ்டெர் லைட் ஆலையில் நடைபெற்றது படுகொலை” என விமர்சனம் செய்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண் டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் உண்மையை ஏற்றுக் கொள்ளாத அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சிபிஎம் மாநிலச் செயலாளர் கருத்துக்கு, “நாவடக்கம் வேண் டும் எனவும், கம்யூனிஸ்டுகள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்” எனவும் வசைபாடியுள்ளார். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் கிழக்கு மாநகரக்குழு உறுப்பினர் பெரியசாமி தலை மையில், சி.வி.சண்முகத்தின் உருவப்படத்திற்கு பேண்டேஜ் ஒட்டியும், சி.வி.சண்முகத்திற்கு நாவடக்கம் தேவை என வலி யுறுத்தி பேண்டேஜ்களை  தபால் மூலம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.