நாமக்கல், ஆக.9- மார்க்சிஸ்ட் கட்சியின் நடைப்பயண பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து, ஒரு வருடத்திற்கு பிறகு நில ஆவணங்களை திருத்தி பாதிக்கப்பட்ட தொழிலாளிடம் அதிகாரிகள் வழங்கினர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், கிளப்பாளையம் கிரா மம், கருக்கூரில் உள்ள ரிக் வண்டி தொழி லாளி சக்திவேல் என்பவர் பெயரில் உள்ள 12 சென்ட் நிலம், கணினி சிட்டா வில் மூன்று சென்ட் நிலம் என தவறாக இடம்பெற்றுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்தாண்டு ஆக.9 ஆம் தேதியன்று திருச்செங்கோடு வருவாய் கோட்டாட் சியரிடம் சக்திவேல் மனு அளித்தார். அம்மனுவை பெற்றுக்கொண்ட அதிகா ரிகள், ஒரு வருடமாக இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த விவகாரத்தில் மார்க் சிஸ்ட் கட்சியினர் தலையிட்டு உடன டியாக சரி செய்ய வேண்டும் என வருவாய் துறையினரிடம் கூறியபோ தும், எவ்வித மாற்றமும் செய்யாமல் அதிகாரிகள் இருந்த வந்தனர். இத னைக் கண்டித்து, வெள்ளியன்று கிளாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு துவங்கி, கொட்டங் காடு, 85 கவுண்டம்பாளையம், பிஎஸ்என்எல் அலுவலகம், உஞ்சனை பேருந்து நிறுத்தம், தனியார் கல்லூரி வழியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் நடைப்பயண பிரச்சார இயக்கத் தில் ஈடுபட்டனர். குமாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைப்பய ணம் நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு கணினியில் திருத்தம் செய்து சான்றிதழை திருச் செங்கோடு வருவாய் துறையினர் தொழிலாளி சக்திவேலிடம் வழங் கினர். முன்னதாக, இந்த நடைப்பயணத் தில் எலச்சிபாளையம் ஒன்றியக் கவுன் சிலர் சுரேஷ், ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம், மாவட்டக் குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டு சாமி, ஈஸ்வரன், மூத்த தோழர்கள் சுந்த ரம், சிங்காரவேல், மோட்டார் சங்க மாவட்டப் பொருளாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.