அவிநாசி ஆக.28 அவிநாசி பேரூராட்சி முத்து செட்டிப்பாளையம் பகு தியில் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அவிநாசி பேரூராட்சி ஒன் பதாவது வார்டுக்குட்பட்ட பகு தியில் நவீன வசதிகள் கூடிய சமுதாயக்கூடம் காலதாமதம் இன்றி கட்டி தர வேண்டும். கால்நடை மருத்துவமனை முதல் அவிநாசி சேவூர் சாலை வரை அமைக்கப்பட் டுள்ள வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் அடித்து தர வேண்டும். ஒன்பதாவது வார் டுக்கு உட்பட்ட இந்திரா காலனி மற்றும் வார்டு முழுவதும் உள்ள சாக்கடைகளை புதுப் பித்து தர வேண்டும். அதே வார்டில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு உரிய மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். அத்து டன் குடிநீர் வசதியும் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்காடு கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செய லாளர் அவிநாசியப்பன் தலைமை ஏற்றார். இதில் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கனகராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கட்சி யின் அவிநாசி வடக்கு கிளைச் செயலா ளர் சந்திரன், வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வடிவேல், முன்னாள் ஒன்றிய தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண் டனர்.