திருப்பூர், டிச.24 - திருப்பூரில் பராமரிப்பு இல்லாத குழந்தைகள் பூங்காவில் இருந்து அருகாமையில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைவதால், உடனடி யாக பராமரிப்புப் பணியை மேற் கொள்ள வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் மாநகராட்சி 14 ஆவது வார்டு, பெரியார் காலனியில் உள்ள குழந்தைகள் பூங்கா, பராமரிப்பு ஏதும் செய்யப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. இதன் அருகிலுள்ள சில வீடுகளுக்குள் பாம்புகளும் நுழைந் துள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக பாம்புப் பண்ணை போல் புதர் மண் டிக் கிடக்கும் பூங்காவை பராமரிக்க வேண்டும். அதேபோல், பெரியார் காலனி சாலை, கற்கள் பெயர்ந்து, குண் டும் குழியுமாக நீண்ட நாட்களாக தார்ச்சாலையாக அமைக்கப்படா மல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றைக் கண்டித்தும், உடனடி யாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியார் காலனி கிளைகள் சார்பில், திங்க ளன்று இந்த பூங்கா அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பெரியார் காலனி கிளைச் செய லாளர் ஜார்ஜ் வர்கீஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்க ராஜ், வேலம்பாளையம் நகரக் குழு உறுப்பினர்கள் ஆர்.சுகுமார், பி.பாபு ஆகியோர் கோரிக்கையை வலியு றுத்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரக் குழு உறுப்பினர் என்.விஸ்வநாதன், பெரியார் காலனி (மாதர்) பி கிளைச் செயலாளர் எஸ்.கலைவாணி உள் ளிட்ட 75க்கும் மேற்பட்ட பொதுமக் கள் கலந்து கொண்டனர்.