ஈரோடு, ஜுலை 8- உள்ளூர் தொழிலாளிக்கு வேலை தர மறுக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தை கண்டித்து சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றுபட்ட தொழிலாளர்களின் போராட்டத் தையடுத்து ஜஓசிஎல் நிர்வாகம் பணிந்தது. ஈரோடு மாவட்டம், பெருந் துறை சிப்காட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாட்டலிங் பிளான்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு சிப்டிற்கு சுமார் 75 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈஸ் வரமூர்த்தி என்பவரை நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்துள்ளது. இத்தகவல் மற்ற தொழிலாளர்க ளுக்கும் பரவியது. இதனால் வெள் ளியன்று காலை 6 மணிக்கு சிப்ட்முடிந்து மறு சிப்ட் தொடங் கும் நிலையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் உள்ளே செல்லா மல் சிஐடியு தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு இதர தொழிற்சங்கங்களும் ஆதர வளித்தனர். தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், நிர்வாக கிளை மேலாளர் உள்ளிட் டோர் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு கான்ட் ராக்ட் தொழிலாளர் சங்க தலைவர் கே.குப்புசாமி, பெருந்துறை பொது தொழிலாளர் சங்க செயலாளர் எஸ். என்.மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 8 மணி நேர போராட்டம் மற்றும் பேச்சு வார்த்தைக்குப் பின் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழி லாளியை நிபந்தனையின்றி வேலையில் சேர்த்துக் கொள்வது என உடன்பாடு ஏற்பட்டது. இதனை யடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும் பினர். இது தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சிஐடியு தலை வர்கள் தெரிவித்தார்.