காசாளரை அரிவாளால் வெட்டியவர் கைது
கோவை, டிச.27- போத்தனூரில் கோழிக்கறி கடை காசாளரை அரிவா ளால் வெட்டிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், போத்தனூரை அடுத்த ஸ்ரீனிவாச நக ரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (69). இவர் பேரூர் நெடுஞ்சாலை யில் உள்ள இறைச்சி கடையில் 20 வருடங்களாக காசாளராக வேலை செய்து வருகிறார். அந்த இறைச்சி கடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த கதிர்வேல் (21) என்பவர் இறைச்சி வெட்டும் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலை யில், ஞாயிறன்று வழக்கம்போல இறைச்சி கடையில் 2 பேரும் வேலை செய்து கொண்டு இருந்தனர். விடுமுறை நாள் என்ப தாலும், கிறிஸ்துமஸ் என்பதாலும் கடையில் கூட்டம் அதிகள வில் இருந்துள்ளது. அப்போது கதிர்வேல் வேலையை மெது வாக செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்த வேலாயு தம் அவரிடம் வேலையை வேகமாக செய்யும் படி கூறியுள் ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகரா றாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கதிர்வேல் அவரை தகாத வார்த் தைகளால் திட்டி, இறைச்சி வெட்டும் அரிவாளை எடுத்து வேலாயுதத்தை வெட்டினார். இதனால் அவருக்கு காது, கழுத்து, வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டி யது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வேலாயுதம் பெரிய கடை வீதி போலீசில் புகாரளித் தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கதிர்வேலை கைது செய்தனர். இதன்பின் அவர் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பொய் வழக்கு: மாணவர் சங்கத்தினர் விடுதலை
கோவை, டிச.27- சுவற்றில் எழுதியதற்காக காவல் துறையினர் போட்ட பொய் வழக்கில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தினர் நீட்தேர்வை தடை செய்ய வலியுறுத்தி சுவர் பிரச்சாரம் செய்தனர். அன்றைய அதிமுக அரசு நகரின் அழகை கெடுப்பதாக பொய் வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கை மாணவர் சங்கத்தினர் கடந்த 4 ஆண்டுகளாக எதிர்கொண்டனர். கோவை ஒருங்கினைந்த நீதிமன்றத்தின் எண் 3ல் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு செவ்வாயன்று வழங்கப்பட்டது. இதில், மாணவர் சங்கத்தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கை திறம்பட நடத்தி, விடுதலை பெற்றுத்தந்த அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகி கோபால் சங்கருக்கு மாணவர் சங்கத்தினர் நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
சிபிஎம் போராட்ட எதிரொலி: வரி வசூல் ஊழியர் மாற்றம்
அவிநாசி, டிச.27- வரி வசூல் செய்வதில் மக்கள் அலைகழிப்பு செய்யப் பட்டதை கண்டித்து திருமுருகன்பூண்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக வரி வசூல் செய்யும் ஊழி யர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருமுருகன்பூண்டி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு ஒரு வருட காலம் கடந்த நிலையில், நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான அலுவலர்களை உடனே நியமிக்க கோரியும், புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, வரைபடம் போன்ற அனுமதிக்கு மக்களை அலைகழிக்கச் செய்யும் திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித் தும், லஞ்சம் இல்லாத நகராட்சி நிர்வாகத்தை நடத்த கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி பகுதி கிளைகள் சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரில் டிச.14 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக திருமுருகன்பூண்டி நகர மன்ற ஆணையர் மோகன் குமார், வரி வசூல் செய்யும் ஊழியர் பிர காஷ் மாற்றம் செய்யக்கோரி டிச.22 ஆம் தேதி மண்டல இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் பேரில் திரு முருகன் பூண்டி நகராட்சியில் புதிய வரி வசூல் செய்யும் ஊழிய ராக சக்திவேலை நியமனம் செய்துள்ளனர்.
போலி மதுபான ஆலை வழக்கு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ஈரோடு, டிச.27- ஈரோட்டில் போலி மதுபான ஆலை வழக்கில், 11 பேர் பிடி பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து, அதில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சூளை பகுதியில் போலி மதுபான ஆலை செயல்படுவதை கடந்த அக்டோபர் மாதம் மது விலக்கு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இதில், தொடர்பு டைய 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் ஸ்பிரிட், 2 இயந்திரங்கள், 50 போலி மதுபான பாட்டில்கள், ஹாலோ கிராம் ஸ்டிக்கர்கள், ஒரு வேன் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், தலைமறைவாகியிருந்த ராஜராஜன் (28) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்த ராஜராஜனை ஈரோடு போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய 12 பேரும் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், இவ்வழக்கில் முக் கிய குற்றவாளியான வீரபாண்டி, முகேஷ் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா தெரிவித்தார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:49.07/60அடி நீர்வரத்து:101கன அடி வெளியேற்றம்:27கன அடி மழையளவு:2மிமீ அமராவதி அணை நீர்மட்டம்: 89.31/90அடி. நீர்வரத்து:832கனஅடி வெளியேற்றம்:213கன அடி மழையளவு:5மிமீ
கரும்புக்கு அடிமாட்டு விலையா? நியாய விலையா? தமிழக அரசை எதிர்ப்பார்க்கும் கரும்பு விவசாயிகள்
திருப்பூர், டிச. 27 – தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெறாத நிலையில், அடிமாட்டு விலைக்கு கரும்பைக் கொள்முதல் செய்வதற்கு இடைத்தரகர்கள் முயற் சிக்கின்றனர். எனவே அரசு நியாய மான விலையில் கரும்பைக் கொள் முதல் செய்து பொங்கல் தொகுப்பில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்க ரும்பு இடம் பெற்று வந்தது. மக்க ளுக்கு வழங்குவதற்காக அரசு நேர டியாக கரும்பு கொள்முதல் செய்த நிலையில் விவசாயிகளுக்கு ஓரளவு நியாயமான விலை கிடைத்தது. எனவே இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், பொங்கல் பண்டிகை சமயம் அறுவடை செய் யும் வகையில், விவசாயிகள் திட்ட மிட்டு அதிகளவு கரும்பு பயிரிட்டி ருந்தனர். ஆனால், அரசு அறிவித்த பொங் கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாத நிலையில், விவசாயிக ளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள் ளது. லட்சக்கணக்கான ஏக்கரில் பெரும் முதலீடு செய்து கடும் உழைப் பில் விளைவிக்கப்பட்ட செங்க ரும்பை எப்படி சந்தையில் விற்பனை செய்வது என்ற மலைப்பு ஏற்பட்டுள் ளது. இந்த சூழ்நிலையை பயன்ப டுத்தி இடைத்தரகர்கள், கரும்பு விவ சாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு கரும்பைக் கொள்முதல் செய்வ தற்கு கிராமம், கிராமமாகச் சென்று வருகின்றனர். நியாயமான விலை கிடைக்காவிட்டால் விவசாயிகள் பெருத்த நட்டத்திற்கு உள்ளாகி பொருளாதார இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே விவசாயிகளை சிக்கலில் தள்ளிவிடாமல் பாதுகாக்கும் வகை யில், நம்பிக்கையோடு பயிர் செய்த செங்கரும்புகளை, நேரடி கொள்முதல் செய்து, பொங் கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு கரும்பு வழங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள் எதிர்ப்பார்க்கின்றனர். விவசா யிகள் நிலையை உணர்ந்து அரசு உட னடியாக கரும்பு கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்களை நடத்த நேரிடும் என்று பல்வேறு விவசாயிகள் சங்கத் தினர் கூறியுள்ளனர்.
சிறப்பு ரயில் இயக்கம்
கோவை, டிச.27- கோவையிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் துக்கு டிச.28 ஆம் தேதியன்று (இன்று) சிறப்பு ரயில் இயக் கப்பட உள்ளது. கிழக்கு மத்திய ரயில்வே சார்பில் ஒரு மார்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (எண் 03358) டிச.28 ஆம் தேதியன்று (இன்று) அதிகாலை 12.50 மணிக்கு கோவையிலிருந்து புறப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, ரேனிகுண்டா, விஜயவாடா, விசாகப் பட்டினம், சம்பல்பூர், ரூர்கேலா, ராஞ்சி வழியாக டிச.29 ஆம் தேதியன்று இரவு 10 மணியளவில் தன்பாத்தை சென்றடை கிறது. இந்த ரயிலில் 12 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், 3 மூன்றாம் வகுப்பு ஏ.சி. ஆகிய பெட்டிகள் உள்ளது.
மூதாட்டி கொலை கல்லூரி மாணவர் கைது
மேட்டுப்பாளையம், டிச.27- பங்கு சந்தையில் முதலீடு செய்ய பணம் தேவைப் பட்டதால், மூதாட்டியை கொலை செய்து, 20 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் கல்லூரி மாணவரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத் துள்ள ஜடையம்பாளையம்புதூர் கிராமத்தில் விவசாயி முருகையன் (63), தனது மனைவி சரோஜாவுடன் (59) வசித்து வந்தார். கடந்த டிச.21 ஆம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்த சரோஜா கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், வீட்டிலிருந்த சுமார் 20 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இச்சம்பவம் குறித்து முருகையன் கொடுத்த புகாரின் பேரில், சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். கொலை நடந்த பகுதியிலிருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்விற்கு உட் படுத்தப்பட்டன. மூதாட்டியின் வீட்டிற்கு வந்து சென்ற நபர்கள் குறித்தும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். பலகட்ட விசாரணைக்கு பின்னர் கொலை செய்யப்பட்ட சரோஜா வசிக்கும் அதேபகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி யில் இரண்டாமாண்டு கணினி அறிவியல் பயின்று வந்த வசந்தகுமார் (19) என்ற இளைஞர் கைது செய்யபட்டார். வசந்தகுமாரின் தாயான கற்பகவல்லியம்மாளுடன், கொலை செய்யப்பட்ட சரோஜா நட்பாக பழகி வந்த தாகவும், இவர்களிடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்ததாகவும் தெரிய வந்தது. இந்த பழக்கத்தின் காரணமாக சரோஜாவின் வீட்டிற்கு சென்ற வசந்தகுமார் அவர் மட்டும் தனியே இருப்பதை பயன்படுத்தி சரோஜாவை கொலை செய்து, பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. மேலும், கல்லூரியில் படித்துக் கொண்டே பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்த தனக்கு பணத்தேவை இருந்ததால் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வசந்தகுமார் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்ட போலீசார் வசந்த குமாரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
யானை தாக்கி ஒருவர் மரணம்
ஈரோடு, டிச. 27- கடம்பூரில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந் தார். ஈரோடு மாவட்டம், கடம் பூர் வனச்சரகம் பெரிய குன்றி பீட் மற்றும் பொறுப்பு குன்றி கோவிலூர் பீட்டில் வனக்காப்பாளராக பணி புரிந்து வருபவர் சுதாகர். இவர் ஞாயிறன்று ரோந்து பணி முடிந்து இரவு சுமார் 9 மணிக்கு திரும்பியுள்ளார். அப்போது மாமரத்துப்பள்ளம் அரு கில் உள்ள அடர்ந்த காட்டில் வந்தபோது, யானைகள் தாக்கிய நிலையில் ஏலஞ்சி பகுதியைச் சேர்ந்த குருசாமி கவுண்டர் மகன் பழனிசாமி என்பவர் பேச்சு மூச்சு இல்லா மல் கிடந்துள்ளார். குன்றியி லிருந்து கடம்பூர் வந்து கொண்டு இருக்கும்போது யானைகள் தாக்கியதில் பழனிசாமி இறந்திருக்கலாம் எனத் கூறப்படுகிறது. இது குறித்து கடம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.