districts

img

மன நோயாளி போல் நடித்து திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது

கோவை, மே 26- கோவையில் மன நோயாளி போல்  நடித்து திருட்டு சம்பவங்களில் ஈடு பட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் செயல்பட்டு வரும் கடை ஒன்றியில் பொருத்தப்பட்ட ஏ.சி யின் வெளிப்புற பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த காப்பர் கம்பிகள் திருடு போன தாக காவல்துறையிடம் புகார் அளிக் கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் அங் குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் காப்பர் கம்பிகளை ஒருவர் திருடுவது பதிவாகியிருந்த நிலையில், அந்நபர் குறித்து காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலை யில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங் கரையைச் சேர்ந்த காளியப்பன் என்ப வர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் அப்பகுதிகளில் குப்பை களை சேகரித்து தன்னை ஒரு மன நோயாளி போல் காட்டிக்கொண்டு யாரும் இல்லாத இடத்தில் இருக்கின்ற  பொருட்களை திருடிச் சென்று விற்று  பணமாக்கி வந்தது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே காட்டூர், ரத்தன புரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதியப்பட்டு சிறைக்கு சென்றிருப்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது  செய்த காவல்துறையினர் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.