districts

பாதாளச் சாக்கடைப் பணிகளில் இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்!

திருவள்ளூர், பிப்,17- “பாதாளச் சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை நீக்க இயந்திரங்களை யே முழுமையாக பயன்படுத்த வேண் டும்; மனிதர்களைத் தவிர்க்க வேண் டும்” என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மே ளன மாநில மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சம்மேளனத்தின் 10-ஆவது மாநில மாநாடு மீஞ்சூரில் சனிக்கிழமை (பிப்ர வரி 17) அன்று தோழர்கள் ப. சண்முகம்,  நா. பாலசுப்பிரமணியன் நினைவரங் த்தில் நடைபெற்றது. சம்மேளனத் ்தின் மாநில துணைத்தலைவர் பொன். கிருஷ்ணன் மாநாட்டிற்கு தலைமை  தாங்கினார். மாநிலத் துணைத்தலை வர் என். கிருஷ்ணமூர்த்தி சங்கக் கொ டியை ஏற்றி வைத்தார். மாநிலத் துணைச் செயலாளர் கே. ரத்தினக்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வர வேற்புக்குழுத் தலைவர் கே. விஜயன் வரவேற்றார். சிஐடியு மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வி. குமார் துவக்க உரையாற்றினார்.  சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். கணேசன், பொருளாளர் ஆர். பாலசுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கை முன்வைத்தனர். சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் சிறப்புரையாற்றினார்.  புதிய நிர்வாகிகள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவ ராக கே.ஆர். கணேசன், பொதுச் செய லாளராக ஆர். பாலசுப்பிரமணியன், பொருளாளராக கே. ரங்கராஜ், மாநில துணைத்தலைவர்களாக என். கிருஷ்ண மூர்த்தி, பொன். கிருஷ்ணன், ஆர். வீரையா, டி. முனுசாமி, ஏ. வீராசாமி, எம். அய்யாதுரை, பி. ஜேசுதாஸ், எம். பால சுப்பிரமணியன், கே. முகமது அலி ஜின்னா, மாநிலச் செயலாளர்களாக ஏ.ஜி. சந்தானம், எம். பன்னீர்செல்வம், கே. தங்கமணி, டி. ஜெயப்பாண்டி, கே.  ரத்தினக்குமார், பி. சீனிவாசலு, டி. ராக வன், ஜி. முனுசாமி, மணிமாறன், பி. கதிர்வேல் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். தீர்மானங்கள்  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் உள்ளாட்சி ஊழியர் பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்; தனியார், அவுட் சோர்சிங் முறையில் துப்புரவுப் பணி கள் நடைபெற வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள் 10, 139, 152 ஆகிய வற்றை ரத்து செய்ய வேண்டும், பணியின்போது மரணம் ஏற்படும் இடங்களில் வாரிசுகளுக்கு வேலை வழங்கவேண்டும், டெங்கு, கொசு ஒழிப்புப்பணியில் ஈடுபடும் தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச ஊதி யத்தை அரசாணைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.