districts

img

எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை உண்மைக்கு மாறானது

சேலம், அக்.16- எதிர்க்கட்சி தலைவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளபடி மருந்துகள் தட்டுப்பாடு இல்லை. போதிய அளவில் இருப் பில் உள்ளது என சேலம் மருந்து கிடங்கில் ஆய்வு செய்த பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள் ளார். சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள சேலம் அரசு மாவட்ட மருந்து கள் கிடங்கில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற் கொண்டார். இதையடுத்து மருந்து கள் தட்டுப்பாடுகள் உள்ளதா? எவ் வளவு மருந்துகள் இருப்பு உள் ளது? என்பது குறித்து அதிகாரிகளி டம் கேட்டறிந்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறு கையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை யில், உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு இல்லை என்றும், மருந் துகளை பொதுமக்களே வாங்க சொல்லும் அவலம் உள்ளது என் றும் சொல்லப்பட்டுள்ளது. இந் நிலையில், எந்தெந்த மருந்துகள் தட்டுப்பாடு என்று கூறியிருந்தாரோ அதற்கான இருப்பு குறித்தும், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் பொதுமக்களை வாங்கி வர சொல் லக்கூடாது எனவும், அதை மருத்து வர்களை வாங்கி தர வேண்டும் என் றும் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் சுற்றறிக்கை வெளியிட் டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அரசு மருத்துவமனை பொதுமக்களை மருந்துகளை வாங்க சொல்வதாகவும், மருந்து களை இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக் கையின் உண்மைத்தன்மை என்ன வென்று தற்பொழுது தெரிவிக்கி றோம்.

சேலம் மருந்து கிடங்கில் மூன்று மாதத்திற்கு தேவையான மருந்து கள் தற்பொழுது இருப்பு இருந்து கொண்டுள்ளது. ஒரு சில மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு, வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டால் அதை மருத்துவர்கள் வாங்கிக்கொள் ளும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், எடப்பாடி பழனிச் சாமிக்கு புதிய நானோதயம் பிறந்து மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள் ளார். மருந்துகள் இருப்பு குறித்து சந்தேகம் இருக்குமானால் மருந்து  கிடங்கு மற்றும் மருத்துவமனை யில் நேரில் வந்து ஆய்வு செய்ய லாம். யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து எடப்பாடி பழனிச்சாமி இந்த மருந்துகள் இல்லை என்று அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் இருந்தால் அரசு மருத்துவ மனை மற்றும் மருத்துவக் கிடங்கு களில் நேரில் வந்து ஆய்வு செய்ய லாம். அவர் ஆய்வு செய்வதற்கு அனுமதி தருகிறோம். எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் கூறியபடி டிஎன்எம்எஸ்சி இழுத்து மூடுவ தற்கு தேவையில்லை; சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்க ளுக்கு மருந்து தட்டுப்பாடு இருப் பது தெரிந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என் றார். மேலும், திரைக்கலைஞர் நயன் தாரா விவகாரத்தில் முழுமையான விசாரணை அறிக்கை  கையில்  கிடைத்தவுடன் எந்த மாதிரியான  விதிமுறைகள் பின்பற்றப்பட் டுள்ளது. விதிமுறைகள் சட்டட் திற்கு உட்பட்டதா? என்பது குறித்து முறையாக அறிக்கை கிடைத்தவு டன் அறிவிக்கப்படும் எனவும் கூறி னார். தமிழகத்தில் ஒன்றிய அமைச் சர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு காரணம் 2024 ஆம் மே நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக் கான நாடகம், என்றார்.