ஈரோடு, ஜூன் 26- அருந்ததிய மக்களின் பயன்பாட் டில் உள்ள கட்டுமானங்களை வண்டிப்பாதை எனக்கூறி அகற்றக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் முறையிட்டனர். இதுகுறித்து ஆட்சியரிடம் அளிக் கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதா வது, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டத்திற்குட்பட்டது வேம்பத்தி கிரா மம். இங்குள்ள கூலிவலசு அருந்ததி யில் காலனி பகுதியில் சுமார் 250 குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அரசுப்பள்ளி, பொதுக் கழிப்பறை ஆகியவை பயன்பாட் டில் உள்ளன. அத்துடன் அப்பகுதி மக்களின் குலதெய்வமான மதுரை வீரன் கோவிலும் உள்ளது. இதன் கிழக்கு புறத்தில் உள்ள அர்ச்சுணன் என்ற தோட்டத்துக்காரர் தகராறு செய்து வந்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வண்டிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு பெற் றுள்ளார். அவர் கூறுவது போல் மேற் படி இடம் எந்த காலத்திலும் வண்டிப் பாதையாகவோ, நடைபாதை போன்ற பாதைக்கான பயன்பாட்டில் இருந்த தில்லை. அப்பகுதி மக்களின் பயன் பாட்டிற்காக அரசு அமைத்து கொடுத்த கட்டுமானங்களை தனி யொருவர் வண்டிப்பாதை என அகற்ற முனைகிறார். இதனை மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் தலையிட்டு, ஏற்கனவே இருந்ததைப் போல அப்பகுதி மக் களின் பயன்பாட்டிற்கான இடமா கவே தொடரச்செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.ஆர்.விஜயராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.