கோவை, பிப்.23- களப்பணியாளர்களின் பணிச் சுமையை குறைந்திட வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கை களை முன்வைத்து நில அளவை யாளர் சங்கத்தினர் கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர். களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும். நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் செய்திடும் களப் ்பணியாளர்களின் ஒட்டுமொத்த பணியிளையும் கருத்தில் கொள் ளாமல், உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போக்கினை கைவிட வேண்டும், கடுமையான பணி சுமையுடன் வேலை பார்க் கும் நில அளவர்கள் முதல் உதவி இயக்குநர்கள் வரை நிலுவை மனுக் களை காரணம் காட்டி ஏற்படுத்தப் பட்டுள்ள குற்ற குறிப்பாணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரத போராட்டம் கோவையில் நடைபெற்றது.
தமிழ்நாடு நில அளவை களப் பணியாளர்கள் அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் சார்பில் மண்டல அளவிலான உண்ணா விரதம் சிவானந்தகாலனியில் நடை பெற்றது. கோவை, சேலம், தரும புரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, அரிய லூர் உள்ளிட்ட மாவட்ட அலுவ லர்கள் மற்றும் களப்பனியாள கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக உண்ணாவிரத போராட்டத்திற்கு, சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செ. முருகேசன் தலைமை ஏற்றார். போராட்டத்தினை துவக்கி வைத்து, தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் ப. செந்தில் குமார் துவக்கவுரையாற்றி னார். தமிழ் நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோ. பழனியம்மாள், நில அளவை பதி வேடுகள் துறை புல உதவியாளர் கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.அருள் குமார், தமிழ்நாடு கிராம சுகாதார செவி லியர்கள் சங்கத்தின் மாநில தலை வர் சி.பரமேஸ்வரி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ச.ஜெகநாதன், வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சு.ரமேஷ் உள் ளிட்ட தலைவர்கள் போராட்டத் தினை வாழ்த்தி உரையாற்றினர். போராட்டத்தின் அவசியம் குறித்து, சங்கத்தின் மாநில செயலாளர்கள் ரா.கல்பனா, சக்திவேல் உரையாற் றினர். உண்ணாவிரத போராட் டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைபொதுச் செயலாளர் மு. சீனிவாசன் உரையாற்றினார். முடிவில், மாவட்ட செயலாளர் ச. தமிழ் செல்வன் நன்றி கூறினார்.