ஈரோடு, ஏப்.16- ஈரோட்டில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பிழைப்பூதியம் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள் ளனர். ஜவுளி, விவசாயம் மற்றும் விவ சாயம் சார்ந்த தொழில்களும் நிறைந்தது ஈரோடு மாவட்டம். இவற்றிற்குத் தேவையான மூலப் பொருட்களைக் கொண்டு வருவ தற்கும், உற்பத்தியான சரக்கு களை விற்பனைக்கு பல்வேறு பகுதிகளுக்கு ரயில் மற்றும் சாலை வழியாகக் கொண்டு செல்லப்படு கின்றன. சாலை மார்க்கத்திலான போக்குவரத்திற்கு பல லாரி நிறுவ னங்கள் உள்ளன. இவ்வாறு சரக்குகள் ஏற்றும் போதும், இறக்குமதி செய்யும் போதும் சுமைதூக்கும் தொழி லாளர்கள் அவசியம். இப்பணி களுக்கு ஈரோடு மாநகரில் 5000 தொழிலாளர்கள் உள்ளனர். இத் தொழிலாளர்கள் அவரவர் வேலை அவரவருக்கே என்ற “ஸ்டேட்ஸ் கோ” ஒப்பந்தப்படி வேலை செய்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை இத்தொழிலா ளர்கள் சுமூகமான முறையில் ஒப்பந்தம் ஏற்பட்டு கூலி உயர்வு பெற்று வந்தனர். கொரோனாவிற்கு முன்பும், பின்பும் இத்தொழிலாளர்களின் கூலி பிரச்சனைக்கு தீர்வு காணப் படவில்லை. இதுகுறித்து ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள பல் வேறு சங்கங்கள் இணைந்து பல் வேறு முறையீடுகளை செய்து, போராட்டங்களையும் நடத்தி வந் தனர். இந்நிலையில், தீபாவளி போனஸ் குறித்த பிரச்சனையில் விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவ னத்தில் பணியாற்றிய தொழிலா ளர்கள் 7 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டனர். இவ்வாறு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்கள் கடந்த டிசம்பர் 3 ஆவது வாரத்தில் மீண்டும் வேலை யில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அழைக்கப்பட வில்லை. இதுகுறித்து முறை யிட்டும் பலனில்லை. இவ்வாறு 3 மாதங்கள் கடந்த நிலையில், சில தொழிலாளர் களுக்கு தற்காலிக பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டு வேலையளிக் கப்பட்டது. சிலர் வேலைக்கு அழைக்கப்படவில்லை. இந்நிலை யில், அவர்களது தற்காலிக பணி நீக்கம் தொடரும் நிலையில், ஊதியம் இழப்பு ஏற்பட்டு வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையும், வருவாயுமின்றி மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள தொழிலாளர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்க வேண்டும். அத்துடன் தற்காலிக பணி நீக்க காலத்திற்கு பிழைப்பூதியம் (sustenance allowance) வழங்க வேண்டுமாறு கோரியுள்ளனர். தங்களது வாழ் வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள் நீதிமன்றத் தையும் நாடியுள்ளனர்.