வட்டி விகிதத்தை அதிக ரித்திருப்பது திருப்பூர் ஏற்றுமதி பின்னலா டைத் தொழில் துறையினரை கடுமையாக பாதிக்கும் என்பதால் ஏற்றுமதியாளர்க ளுக்கு இசிஎல்ஜிஎஸ் 5.0 என்ற சலுகைத் திட்டத்தை அறிவிக்கும்படி திருப்பூர் ஏற்றும தியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்மு கம் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அரசின் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற் றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஆகியோருக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பி இருப்பதாகவும் ராஜா எம். சண்முகம் தெரிவித்திருக்கிறார்.
வட்டி விகிதம் உயர்வு
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: ரெபோ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் பணத்திற்கு உரிய வட்டி விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்துள் ளது. ஏற்கெனவே 4.50 சதவிகிதமாக இருந் தது, தற்போது 4.90 சதவிகிதமாக உயர்த்தப் பட்டு அது உடனடியாக நடைமுறைக்கு வரு வதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கவும், வளர்ச்சி இலக்கு தொடரவும் ரிசர்வ் வங்கியால் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு இருக்கிறது. அதே சமயம் நூல் விலை உயர்வு, பூகோள அரசியல் பதற்றம், வெளிநாடுக ளில் எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணங்களால் திருப்பூர் ஏற்றுமதி வர்த்த கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. வெளி நாட்டில் இருந்து இங்கு வந்து ஆடை வாங்கக்கூடிய வர்த்தகர்களும் ஆடைக ளுக்கு உரிய விலையை அதிகரித்துத் தருவ தற்கு தயங்குகின்றனர். இத்தகைய சிக்க லான கால கட்டத்தில் வட்டி விகிதத்தை மாற்றி அமைத்திருப்பது மேலும் கடுமை யான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக திருப்பூர் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை யினர் நீடித்திருக்கவும் பாதிப்பு ஏற்படும்.
நெருக்கடி காலக் கடன்
எனவே இந்த அம்சங்களைக் கணக் கில் கொண்டு இசிஎல்ஜிஎஸ் 5.0 எனப்படும் அவசர காலக் கடன் தரும் திட்டத்தை அறி வித்து, இங்குள்ள தொழில் முனைவோர் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உதவ வேண்டும் என்று ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார். இசிஎல்ஜிஎஸ் என்பது நெருக்கடி கால கடன் உத்தரவாதத் திட்டம் ஆகும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் கடன் வழங்கப் பட்டது. அதேபோல் இப்போதும் ஒன்றிய அரசு நெருக்கடி காலக் கடன் உத்தர வாதத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ராஜா எம்.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதி நெருக்கடி பிரச்சனை
குறிப்பாக திருப்பூர் பின்னலாடைத் தொழில் முனைவோரைப் பொருத்தவரை மிகப்பெரும் நிறுவனங்களைத் தவிர ஏராள மான சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை யினர் வங்கிக் கடனை ஆதாரமாக வைத்துத் தான் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கப் படுவது அவர்களது சுமையை மேலும் அதிக ரிக்கும். ஏற்கெனவே பாஜக ஒன்றிய அரசின் கொள்கை காரணமாக சிறு, குறு, நடுத்த ரத் தொழில் துறையினர் வங்கிகளில் எளி தில் கடன் பெற முடியாத கடும் கட்டுப்பாடு கள் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. மூலப்பொருள், உதிரி பாகம் விலை யேற்றம், வெளிநாட்டு சந்தை பாதிப்பு போன்ற காரணங்களைப் போல வங்கி கடன், பண நெருக்கடியும் பின்னலாடைத் துறையினரை கடுமையாக பாதித்து வருகி றது. எனினும் இது பற்றி தொழில் அமைப் புகள் வெளிப்படையாக விமர்சிப்ப தில்லை. இந்த பின்னணியில் தற்போது ஏற்றுமதியாளர் சங்கம் ரிசர்வ் வங்கி யின் வட்டி விகித அதிகரிப்பினால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் மேலும் பாதிக்கும் என்று தெரிவித்திருப்பது முக்கியமான தாகும். அரசின் கொள்கை நடைமுறையை கடுமையாக விமர்சிப்பதற்கோ, எதிர்ப்புத் தெரிவிப்பதற்கோ இவர்கள் முன்வருவ தில்லை. எனினும் நெருக்கடியின் தீவிரம் இவர்களை குறைந்தபட்சம் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள் ளியுள்ளது.