வாய்க்காலை சேதப்படுத்திய விவகாரம் மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு
சேலம், பிப்.3- ஆத்தூர் அருகே வாய்க்காலை சேதப்படுத்தியது தொடர் பாக ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (60). இவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் அருகில், இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவி லுக்கு சொந்தமான நிலத்தை, குத்தகை முறையில் முத்துசாமி (65) என்பவரின் குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்ற னர். இந்நிலையில் முத்துசாமி மற்றும் அவரது மகன் பூமாலை (35) ஆகியோர், பொதுமக்கள் பயன்படுத்தும் அம்மம்பாளை யம் சின்ன ஏரி நீரோடை பிரதான வாய்க்காலை சேதப்படுத்தி யதாக ௯றப்படுகிறது. இதுகுறித்து கணேசன் மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி, உறவினர் தமிழ்வேந்தன் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பூமாலை மற்றும் முத்துசாமி ஆகிய இருவரும் அரிவாளால் கணேசன் மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி, உறவினர் தமிழ்வேந்தன் ஆகியோரை சரமாரியாக வெட்டினர். இதில் கணேசனின் இடது கையில் மூன்று விரல்கள் துண்டானது. மேலும், தலை யில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் தமிழ்வேந்தனுக் கும் தலையில் வெட்டு விழுந்ததில் மூவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். மேலும், கணேசன் தரப்பினர் தாக்கியதாக முத்துசாமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவுநீர் கால்வாய் ஒரே மாதத்தில் சேதம்
தருமபுரி, பிப்.3- பெரும்பாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப் பட்ட கழிவுநீர் கால்வாய், ஒரே மாதத்தில் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், பெரும்பாலை ஊராட்சிக்குட்பட்ட சாணாரப்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் நலனை கருதி கழிவுநீர் கால்வாய் சுமார் ரூ.17 லட்சம் மதிப் பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இந் நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. இதேபோல் ஒரு சில இடங்களில் இடிந்து விழுந்து அடைப்பு ஏற்படுவதால் சாக்கடை தண்ணீரானது தேங்கி துர்நாற்றமும் வீசி வருகிறது. மேலும், இரவு நேரங்களில் கொசுக்களால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்ற னர். அரசு ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் அருகில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளதால், அன்றாடம் கோயிலுக்கு செல்வோரும், பள்ளி மாணவ, மாணவி களும் சாக்கடை கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள் ளது. எனவே, இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டு மென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒசூர் – ஓமலூர் இரட்டை ரயில் பாதைக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: தருமபுரி எம்.பி.,
தருமபுரி, பிப்.3- தருமபுரி வழியாக சேலம் செல்லும் ரயில் பாதையை, இரட்டை ரயில் பாதையாக மாற்ற 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிறகு, தருமபுரி ரயில் பாதையை மின்மயமாக்க கோரிக்கை வைத்து, அதன் பயனாக இப்பாதை மின்பாதையாக மாற்றப் பட்டு, தற்போது ரயில்கள் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மின்பாதையாக மாற்றப்பட்டதால் தான் வந்தே பாரத் ரயில் போன்றவை இயக்கப்படுகிறது. ஓசூரிலி ருந்து ஓமலூர் வரை உள்ள ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டு மென தொடர் வலியுறுத்தியதன் காரண மாக ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மேற்கண்ட பணிக்காக முதற் கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது. மொரப்பூர் - தருமபுரி ரயில் திட்டத்திற்கு சென்ற நிதிநிலை அறிக்கையில் 100 கோடி ரூபாயும், தற்போது ஒசூர் - ஓமலுர் இரட்டை ரயில் பாதையாக மாற்ற 100 கோடி ரூபா யும், தருமபுரி மற்றும் மொரப்பூர் ரயில் நிலை யத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை கள் என தொகுதி மக்களின் கோரிக்கையை நான் பதவி வகித்த இக்காலத்தில் வெற்றிகர மாக செய்து முடித்துள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் விஏஓவை மிரட்டி பணம் பறிப்பு
நாமக்கல், பிப்.3- நாமக்கல்லில் பெண் கிராம நிர்வாக அலுவலரை மிரட்டி பணம் பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், கீரம்பூரை சேர்ந்தவர் சசிகலா (29). இவர் கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜன.29 ஆம் தேதி அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றுவதாகவும், லஞ்சம் கொடுத்த நபர் ஒருவர் உங்கள் மீது புகார் அளித்துள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் 25 ஆயிரம் ரூபாய் தனது வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சசிகலா அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கிற்க்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார். சில நாட்களில் மீண்டும் சசிகலாவை தொடர்பு கொண்ட அந்த நபர் மேலும் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து சசிகலா நாமக்கல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபரை கண்டறிந்தனர். விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போகி நாயக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலங்களை அளவீடு செய்ய இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல், பிப்.3- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நில உரிமையாளர்கள் நிலங் களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்க ளுக்கு செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லா மல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயி லாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின் நில அளவர் கையொப்பமிட்ட “அறிக்கை வரைபடம்” ஆகியவற்றை https://eservices.tn.gov.in/ என்ற இணைய வழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொது மக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் டவுன்ஹாலில் மாநாட்டு அரங்கம் இறுதிக்கட்டப் பணிகள் குறித்து ஆய்வு
திருப்பூர், பிப். 3 – திருப்பூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தில் பழைய டவுன்ஹால் வளாகத்தில் புதிதாக மாநாட்டு அரங் கம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் இறுதிக் கட்டத் தை எட்டியுள்ள நிலையில் சனியன்று மாநகர மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருப்பூர் மாநகரில் ரூ.1255 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகி றது. கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட சீர்மிகு நகரத் திட்டத்தில் பகுதியளவில் மேற்கொள்ளும் திட்டங்கள், நகர முழுமையையும் உள்ளடக்கிய திட்டங்கள் என இரு பிரிவாக மொத்தம் 17 வகையான பணிகள் தீர்மானிக்கப் பட்டன. மூன்றாண்டுகளில் இருந்து அதிகபட்சம் ஐந்தாண்டு களுக்கு உள்ளாக சீர்மிகு நகரத் திட்டத்தின் அனைத் துப் பணிகளையும் முடிப்பதென காலக்கெடு நிர்ணயித் திருந்தனர். ஆனால் சற்றேறக்குறைய ஏழு ஆண்டு காலத் தை எட்டியும் சில பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன. இதில் டவுன்ஹால் வளாகத்தில் ஏற்கெனவே இருந்த அரங்கத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய கூட்ட அரங்கம் (கன்வென்ஷன் சென்டர்) ரூ.30 கோடி செலவில் கட்டுமானம் தொடங்கி நடைபெற்று வந் தது. குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டிவிட்ட நிலை யில், தற்போது இப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணிகளை மாநகர மேயர் ந.தினேஷ்குமார், மாந கராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகி யோர் சனியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். இந்த ஆய்வின்போது மாநகராட்சி தலைமைப் பொறி யாளர் லட்சுமணன், துணைப் பொறியாளர் கண்ணன் உள்ளிட் டோர் உடனிருந்தனர். பிப்.11 ஆம் தேதி இந்த புதிய மாநாட்டு அரங்கத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மேயர் ந.தினேஷ்குமார் தெரிவித்தார்.
நாளை மின்தடை
உடுமலை, பிப். 3- உடுமலை தாலூகா, பாலப்பட்டி துணை மின்நிலை யத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு வேலைகள் நடைபெ றுவதால் திங்கள்கிழமை (நாளை) காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதில், உடுமலை காந்திநகர், அண்ணா குடி யிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில் நிலையம், போலிஸ்குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டிணம், மருள் பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி மற்றும் பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
குடிநீர் பணியை முடிப்பதில் மெத்தனம்: திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அதிரடி
திருப்பூர், பிப்.3- ஒரு வாரத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் ஒப்பந்தப் பணி யாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். திருப்பூர் மாநகராட்சிக்கு அம்ருத் திட்டத்தில் 4 ஆவது குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 45 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங் கப்பட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவ டைந்துள்ளது. எனினும் சில பகுதிகளில் பணி கள் முழுமையடையாமல் காலதாமதம் ஆகி வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்க ளுக்கு மேல் தெற்கு பகுதியான 47ஆவது வார் டுக்கு உட்பட்ட காங்கேயம் ரோடு, சென்னிம லைபாளையம் பகுதியில் கட்டி முடிக்கப் பட்ட 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகள் நிறைவ டைந்தும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடி நீர் வழங்காதது. தெரியவந்தது. மாநக ராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரி யப்பனவர் வியாழனன்று காலை அப்பகு திக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண் டார். அப்போது தொட்டி அருகில் பராமரிப் பில்லாமல் சுகாதாரமற்ற நிலையிலும், தொட் டிக்கு மேலே செல்லும் ராட்சத குழாய் இணைப் புகளில் நட்டு (போல்ட்) இல்லாததை கண்டு அதிர்ந்தார். மேலும் அருகில் கீழ்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் கசிவு ஏற்பட் டதையும் பார்த்து கோபமடைந்த ஆணையர் அங்கிருந்து அதிகாரிகளையும், ஒப் பந்த ஊழியர்களையும் கடுமையாக எச்ச ரித்தார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் இந்தக் குடிநீர் தொட்டியிலிருந்து இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் சப்ளை ஆக வேண்டும். இல்லையென்றால் காண்ட்ராக்ட் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துவிட்டு புறப்பட்டார்.
சாலை விபத்து
திருப்பூர், பிப்.3- தேனியில் இருந்து திருப் பூரை நோக்கி வந்து கொண்டி ருந்த அரசு சிறப்பு பேருந்து திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையத்திற்கு வந்த பின், பயணிகளை இறக்கி விட்டு விட்டு பணி மனைக்கு திரும்ப சென்றது. அப்போது அதிவேகமாக வந்த பேருந்து திருப்பூர் தாராபுரம் சாலை, சந்திரா புரம் அருகே வைக்கப்பட்டி ருந்த சாலையின் மையப்பகு தியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. பேருந் தில் பயணிகள் யாரும் இல் லாததால் பாதிப்பு எதுவும் ஏற் படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்த னர்.
வரதட்சணை வழக்கில் கணவனுக்கு 3 ஆண்டு சிறை
உதகை, பிப்.3- வரதட்சணை கொடுமை வழக்கில் குற்றம் சட்டப்பட்ட நப ருக்கு உதகை மகிளா நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண் டனை விதித்துள்ளது. நீலகிரி மாவட்டம், தேவாலா அடுத்த வாழவயல் பகு தியை சேர்ந்தவர் ராஜன் பாபு. இவர் 2011-ஆம் ஆண்டு எம ரால்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பெண்ணை திரும ணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து திருமணம் முடிந்து 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவர் களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வரதட்சணை வாங்கி வரு மாறு ராஜன் பாபு அவருடைய மனைவிக்கு தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதில் அவருடைய மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவாலா உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையி லான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜன் பாபு, அவருடைய தம்பி பாக்கியராஜ், தாயார் வள்ளி யம்மாள், சகோதரி கலாவதி ஆகிய 4 பேர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜன் பாபு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்படி கலாவதியை வழக்கில் இருந்து விடுவித்து, ராஜன் பாபுவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் பாக்கியராஜ், மற்றும் வள்ளியம்மாள் இறந்துவிட் டது குறிப்பிடத்தக்கது.
மறுசுழற்சி செய்ய 79 டன் பிளாஸ்டிக் சேகரித்து பிஎஸ்ஜி மாணவர்கள் கின்னஸ் சாதனை
கோவை, பிப்.3- பிளாஸ்டிக்கால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மறுசுழற்சி செய்வதற் காக 79.73 டன் பிளாஸ்டிக்கை சேகரித்து, கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கின்னஸ் சாதனை புத்தகத் தில் இடம் பிடித்தது. பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில், சமூகத்துக்கு சேவையாற்றுவதும், சமூகப் பங்களிப்பும் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இதன் அடிப்படையில் சமூகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்னை குறித்து மாணவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில் சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது மறுசுழற்சி செய்யப்பட் டாத பிளாஸ்டிக் கழிவுகள்தான் என்பது கண்டறியப்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலும், மாணவர் களிடம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையிலும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசு ழற்சி செய்யும் பணியை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவி யல் கல்லூரி துவங்கியது. பல மாதங்கள் தொடர்ச்சியாக பணி யாற்றி, மாணவர்களின் துணையுடன் மொத்தம் 79.73 டன் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து கின்னஸ் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. கின்னஸ் சாதனை நிறுவனத்தின் பிரதிநிதி ஸ்வப்னில் தங்கரிக்கர் முன்னிலையில், சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை எடை போடும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி சார்பில் மறுசு ழற்சிக்காக 79.73 டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார். கௌரவ விருந்தினராக சிறுத்துளி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவ லர் வனிதா மோகன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கின்னஸ் சாதனை புரிந்ததற்கான சான்றிதழ் கல்லூரி நிர்வா கத்துக்கு கின்னஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
திருநங்கை கொலை வழக்கு: ஐடி ஊழியர் கைது!
கோவை, பிப்.3- கோவை வடவள்ளி, மருதமலை அருகே, கடந்த 29-ந் தேதி அரிவாளால் வெட்டி திரு நங்கை ஒருவரை படுகொலை செய்தனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார், விசா ரனை நடத்தி வந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் செல்வபுரம் தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த திரு நங்கை தனலட்சுமி என்பது தெரியவந்தது. இவர், கடந்த 3 ஆண்டுகளாக மாசிலா மணி என்பவருடன் அன்னை இந்திரா நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், மாசிலா மணி, தனலட்சுமி மற்றும் மாசிலாமணியின் ஆண் நண்பர் ஆகிய மூவரும் இணைந்து இரவு மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரி கிறது. இத்தகராறில், தனலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையாளியை தனிப்படை போலீ சார் வலை வீசி தேடிவந்த நிலையில், சென் னையைச் சேர்ந்த தினேஷ் கந்தசாமி என்ப வரை வடவள்ளி போலீசார் கைது செய்த னர். விசாரணையில், இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதும், தைப்பூச திருவிழா வுக்கு மருதமலைக்கு வந்த போது அவரை திருநங்கைகள் அழைத்துச் சென்று தாக்கி அவரது பணத்தை பறித்துக் கொண்டதா கவும், இதனால் பழிதீர்ப்பதற்காக இந்த கொலையை செய்ததாகவும் கூறி உள்ளார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகி றது.
தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 7 ஆண்டு சிறை
உதகை, பிப்.3- மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவனுக்கு 7 ஆண்டு சிறை தண் டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலா பெருங்கரை உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவ ருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்க ளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலை யில் தம்பதியிடையே குடும்பத் தகராறு அதி கரித்து அவ்வப்போது அவர்களுடைய பிரச் சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோன்று, 2009-ஆம் ஆண்டு உறவி னர் ஒருவரின் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது நாகேஷ் மற்றும் தமிழ்ச்செல்வி தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட் டுள்ளது. இதில் நீ உயிரோடு இருந்தால் எனக்கு பிரச்சினை, எனவே உயிரோடு இருக் காதே என்று கூறிவிட்டு நாகேஷ் சென்று விட் டார். இதனால் மன விரக்தி அடைந்த தமிழ்ச் செல்வி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து தேவாலா உதவி ஆய்வா ளர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய சட் டப்பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதன்பின் நாகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா சீதி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டது. மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக் கில் நாகேசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை யும் ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீத ரன் தீர்ப்பு வழங்கினார். பின்பு நாகேஷ்யை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட் டார். இந்த வழக்கில் நாகேஷின் மூத்த மகனே சாட்சி சொன்னது குறிப்பிடத்தக்கது.
தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை
ஈரோடு, பிப். 3- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற ஈரோடு மாநகர தூய்மைப் பணியாளர்கள் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டப்பட்டனர். ஈரோடு மாநகராட்சி அலுவலக வளா கத்தில் அப்துல் கனி ஜவுளி வணிக வளாக கடை ஒதுக்கீடு ஆணைகள், மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மற்றும் தூத்துக்குடி மாவட் டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன் கரா தலைமை வகித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம் மற்றும் ஈரோடு மாநக ராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த னர். வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றி னார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட் டுதலின்படி, ஈரோடு மாநகராட்சிக்கு உட் பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகை யில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி கள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. குறிப்பாக பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள் ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. மேலும் தூய்மை பணியாளர்களின் பணி என்பது மிகவும் இன்றியமையாத பணியாகும். மாநக ராட்சியில் 2018, 2020, 2021 மற்றும் 2022- ஆம் ஆண்டுகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற 39 ஓய்வுதியதாரர்கள் மற்றும் பணிக் காலத்தில் இறந்த 6 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என 45 நபர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள், இறப்பு மற்றும் ஓய்வுகால பணிக்கொடை தொகை ரூ.2 கோடியே 23 லட்சத்து 21 ஆயிரத்து 168 மற்றும் தொகுப்புத் தொகை ரூ.1 கோடியே 57 லட்சத்து 88 ஆயிரத்து 942 வழங்கினார். மேலும், ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக கட் டப்பட்ட கனி மார்க்கெட் வணிக வளாகத் தில் உள்ள 419 கடைகளில் 141 குத்த கைதாரர்களுக்கு உத்தரவு வழங்கப் பட்டது. சென்னை மற்றும் தென்மா வட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் நிவாரண பணிகள் ஆற்றிய தூய்மைப் பணியாளர்களில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்ற பணியாளர்கள் மிக வும் சிறப்பான பணிகளை ஆற்றினர். அப்பணியாளர்கள், ஓட்டுநர்கள், துப்பு ரவு ஆய்வாளர்கள், துப்புரவு அலுவ லர்கள் உட்பட 113 நபர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகையும் நற் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை
அமைச்சர் முத்துசாமி ஈரோடு, பிப்.3- டாஸ்மாக் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி திட்டவட்டமாகக் கூறினார். பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந் துள்ள அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத் தும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர், டாஸ்மாக் கடைகளில் பில்லிங் சிஸ்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற் றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. 500 கடைகள் மூட திட்டமிடப் பட்டது. அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கு நடைபெறும் தவறு களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர், முது நிலை மண்டல மேலாளர், மேலாண்மை இயக்குநர் ஆகியோர் கண்காணித்து வரு கின்றனர். கவனத்திற்கு வரும் புகார்கள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும், என்றார்.
மதுக்கடை திறப்பு: பொதுமக்கள் முற்றுகை
சேலம், பிப்.3- ஜலகண்டாபுரம் அருகே அரசு மதுபானக் கடை திறக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள தோரமங்களத்தில் இருந்த அரசு மதுக்கடையை அகற்றி, கட்டிநாயகன் பட்டி எம்ஜிஆர் நகரில் மதுக்கடை திறக்க மதுபாட்டில்களை ஊழியர்கள் கொண்டு வந் துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகை யிட்டு போராட்டதில் ஈடுபட்டனர். இதைய டுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஜலகண்டா புரம் காவல் துறைனர் போராட்டதில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தி, கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
உலக ஈர நிலங்கள் தின விழா
நாமக்கல், பிப்.3- நாமக்கல்லில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில் உலக ஈர நிலங்கள் தின விழா நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில், உலக ஈர நிலங்கள் தின விழா நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல் வர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பொதுமக்க ளுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் துணி பைகளை வழங்கி, நீர்நிலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தி பேசினார். கல்லூரியின் பசுமை மன்ற ஒருங்கிணைப் பாளர் வெஸ்லி, ஈர நிலங்கள் பல்லுயிர் பரவலை எவ்வாறு மேம்படுத்துகிறது எனவும், ஒவ்வொரு வீட்டிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு, மழை நீர் உதவும் வகையில் வீடு முழுவ துமாக கான்கீரிட் சிமெண்ட் தளம் அமைக்காமல் சிறிது காலியி டம் அமைத்து செடி கொடிகள் வளர்க்க வேண்டும் என அறிவு றுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் தாவரவியல் துறை மாணவ, மாணவியர்கள் மனித சங்கிலி அமைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிலவுக்கு போகும் எண்ணம் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
நாமக்கல், பிப்.3- நிலவுக்கு போகும் எண்ணம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாமல் இருந்தது. இப்போது அது சாத்தியமாகியிருக் கிறது என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பட்டம ளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலுள்ள ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா, தாளாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், துணை மருத்து வப்படிப்பு படித்தவர்கள் தனியாக கிளினிக் வைக்கிறார்கள். மேற்படிப்புக்கு வெளிநாடு செல்கிறார்கள். பெரும்பாலும் பணி கிடைக்கப்பெறுகிறார்கள். புதிய தொழில்நுட்ப பயிற்சி துவக்கப்பட்டது மகிழ்ச்சி. ஆண்களை விட பெண்கள் அதி கம் பட்டங்களையும், தங்கப்பதங்கங்களையும் பெற்றுள்ள னர். அதிக உயர்கல்வி பெற வேண்டும் என்று இந்திய அள வில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற விழாக்கள் மாணவர்களுக்கு மிகவும் எழுச்சியை ஏற்படுத் தும். சந்திரயான் ஒன்று, இரண்டு, மூன்று என்று போகும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலவுக்கு போகும் எண் ணம் இல்லாமல், செவ்வாய் போன்ற இதர கிரகங்களுக்கு மற்ற நாட்டினர் சென்றனர். ஆனால், நாங்கள் நிலவில் இந்த இடத்தில் தண்ணீர் உள்ளது என்று ஆராய்ந்து, அங்கு செல்ல முயன்று வெற்றி பெற்றுள்ளோம். தற்போது உலக நாடுகள் நிலவுக்கு போகும் முயற்சியை எடுத்து வருகிறார்கள், என் றார்.