தருமபுரி, அக்.5- ஊராட்சியின் துணை தலைவர் மகனின் அத்துமீறிய தலையீட்டின் காரணமாக மக்க ளுக்கான அடிப்படை வசதிகள் கூட நிறை வேற்ற முடியாமல் நிர்வாக சீர்கேட்டில் பண்ட அள்ளி ஊராட்சி உள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உட் பட்டது பண்டஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சி யில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ள டக்கி 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் இல்லை. துணைத் தலைவரான ஜமுனா நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்நிலையில் பண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகள் குடிநீர் வசதி, கால்வாய் வசதி, சாலை வசதி என எந்த வித அடிப்படை வசதிகள் கூட இதுவரை முழு மையாக செய்யப்படவில்லை. பண்ட அள்ளி யில் மினிடேங்க் புதியதாக அமைக்கப்பட் டுள்ளது. இந்த டேங்கிற்கு தண்ணீர் நிரப்பப் படாததால் காட்சி பொருளாக மட்டும் உள் ளது. மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் இதுவரை யில் இங்குள்ள எவருக்கும் வீடு கிடைக்க வில்லை. இதுபற்றி பண்டஅள்ளி ஊராட்சிக் குட்பட்ட பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் பண்டஅள்ளி ஊராட்சிக்கு எஸ்டி பிரிவினர் போட்டியிடும் ஊராட்சியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தி ருந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் நடை பெற்று ரவி என்பவர் வெற்றி அடைந்தார்.
ஆனால் சிலர் ரவி ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்றும், அவரி டம் எஸ்டி சாதிச்சான்றிதழ் கிடையாது என வழக்கு தொடர்ந்த அடிப்படையில் தலைவர் பதவி பறிபோனது. இதனால் ஊராட்சி மன்ற நிர்வாகம் அனைத்தும் துணைத்தலைவர் ஜமுனாவின் பொறுப்புக்கு போனது. ஆனால், ஜமுனாவிற்கு பதிலாக அவருடைய மகன் விக்னேஷ் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்டு நடத்தி வருகி றார். ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண் டும் என கோரிக்கை விடுத்தால், அவர்களி டம் சாதி வேறுபாடு பார்ப்பதும், தங்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டும் கோரிக்கை களை நிறைவேற்றுகிறார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கு மாறு கேட்டால் அதற்கு துணை தலைவரு டைய மகன் விக்னேஷ், பணம் கேட்கின்றார். இதனால் பண்டஅள்ளி ஊராட்சியில் துணை தலைவருக்கு பதிலாக அவருடைய மகன் ஆதிக்கம் பஞ்சாயத்து நிர்வாகத்தில் அதிக மாக உள்ளது. குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை கூட இதுவரை முழுமையாக செயல்படுத்தா மல் பண்டஅள்ளி ஊராட்சி நிர்வாகம் இருக் கின்றது. எனவே, பண்டஅள்ளி ஊராட்சி நிர்வா கத்தில் துணை தலைவர் மகன் தலையீட்டை தடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.