கோவை, ஜன.13- பொங்கல் பண்டிகை யையொட்டி, பொள்ளாச் சியை அடுத்த ஆச்சிப் பட்டியில் சர்வதேச பலூன் திருவிழா வெள்ளியன்று துவங்கியது. 8 நாடுகளில் இருந்து 10 பிரமாண்ட வெப்ப பலூன்கள் பறக்க விடப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழாவை தமிழ்நாடு சுற்றுலா துறை, தனியாருடன் இணைந்து முதல்முறையாக நடத்துகின்றது. இந்த பலூன் திருவிழா 13ஆம் துவங்கி ஜன.15ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இவ்விழாவில் நெதர்லாந்து, அமெ ரிக்கா, பிரேசில், கனடா உட்பட 8 நாடுகளில் இருந்து 10 வெப்ப பலூன்கள் பறக்க விடப்படுகிறது. இதில், 60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட பலூன் திருவிழாவில் பறக்கவிடப் பட்டன. இந்த பலூன்கள் மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங் களிலும் பறக்க விடப்பட்டது. இதில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார் பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது. இந்த பலூன் திருவிழாவை காண தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந் தனர். வெள்ளியன்று பலூன் திருவிழா தொடங்கியதை அடுத்து வானில் வட்டமிட்டு சென்ற ராட்சச பலூன்களை பொள்ளாச்சி பகுதி மக்களும் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.