சேலம், அக்.31- சேலம் மாநகராட்சி பகுதியில் புதிய வீடு ஒன்று கட்டி அதில் தனது மனைவிக்கு சிலை வைத்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த் துள்ளது. அனைத்து இன்பு துன்பங்களிலும் மனைவி உடனிருந்ததால் புதிய வீடு கட்டி, சிலை வைத்துள்ளதாக கனவர் தெரிவித் துள்ளார். சேலம் மாநகராட்சி, 1 ஆவது வார்டுக் குட்பட்ட ஊற்றுகிணறு, கிளாக்காடு பகுதி யைச் சேர்ந்த இருசன் - நிலா தம்பதியி னருக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு கஸ் தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா ஆகிய மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். முதல் பெண் கஸ்தூரிக்கு திருமணமாகிய நிலையில், இரண்டு பெண்களும் தற்பொழுது கல் லூரியில் படித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு கழிப்பறை இல்லாத வீட் டில் வசித்த நிலையில், இரவு நேரத்தில் இயற்கை உபாதை செல்லும் பொழுது பாம்பு கடித்து சிகிச்சைக்காக நீலா அனுமதிக்க பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், இருசன் முயற்சி எடுத்து அனைத்து வசதிகளுடன் பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ளார்.
இதனிடையே கஷ்டப் படும் பொழுது தன்னுடன் இருந்த மனைவியை நினைத்து தன் மனைவிக்கு சிலையை புது இல்லத்தில் வைக்க வேண்டும் என ஆசை எழுந்துள்ளது. இதனையடுத்து சென்னை யில் சிலை தயாரிக்கும் நிறுவனத்துடன் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் சிலிக்கான் மற்றும் பைபர் மூலம் உருவாக்கப்பட்ட தன்னுடைய மனைவியின் முழு உருவ சிலையை உரு வாக்கி தன்னுடைய புதிய இல்லத்தில் வர வேற்பு அறையில் வைத்து நெகிழ்ந்துள் ளார். மேலும், தன்னுடைய மனைவி உயிருடன் இருக்கும் பொழுது அணிந்திருந்த சேலை மற்றும் தங்க நகைகளை சிலைக்கு அணி வித்துள்ளார். கனவனின் இச்்செயல் அப் பகுதியில் நெகிழ்ச்சியையும், கவனத்தை யும் ஈர்த்துள்ளது.