districts

img

பட்ஜெட்டில் புறக்கணிப்பு: அரசு ஊழியர்கள் மனித சங்கிலி

கோவை, மார்ச் 24- தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக் கையில், அரசு ஊழியர்கள் முழுமை யாக புறக்கணிக்கப்பட்டதாக குற்றஞ் சாட்டி மாநிலம் முழுவதும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஜாக்டோ -  ஜியோ கூட்டமைப்பு சார்பில் மனித சங் கிலி போராட்டம் நடைபெற்றது. பழைய பென்சன் திட்டத்தை உடன டியாக அமல்படுத்த வேண்டும். முடக் கப்பட்ட அகவிலைப்படி, காலவரை யின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற் றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய  முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணி புரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழி யர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், கணினி இயக் குபவர்கள், ஊர்ப்புற நூலகர்கள், வனப் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவ ருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள சுமார் 6 லட்சம் காலிப்பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தொடர் இயக்கத்தை மேற் கொண்டனர். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக் கையில், குறைந்தபட்ச கோரிக்கைக ளாவது நிறைவேற்றுகிற அறிவிப்பு வரும் என அரசு ஊழியர்கள் எதிர் பார்த்திருந்தனர். ஆனால், அரசு ஊழி யர்களின் எவ்வித கோரிக்கைகளும் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வில்லை. இதனையடுத்து, ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. இதன்ஒருபகுதியாக வெள் ளியன்று மாநிலம் முழுவதும் மனித சங் கிலி போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் முழுவதும் 8  மையங்களில் ஜாக்டோ - ஜியோ சார்பில்  மனித சங்கிலி போராட்டம் நடைபெற் றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு, ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அரசு தலைமை ஏற்றார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ச.ஜெகநாதன், மாநிலத் தலைவர் க.பாலசுப்ரமணியன், தா.ஆனந்த், எம்.கலைவாணன், வெ. சம்பத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் மனித சங்கிலி போராட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் கெளரவன், நிதி காப்பாளர் கே.புகழேந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர் மகளிர் அணி துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி. காவேரி, வேளாண்மை அமைச்சு பணி யாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெய வேல், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பா.சங்கர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க  மாவட்ட செயலாளர் பொன்.தமிழ்மணி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கழக மாவட்ட தலை வர் துரைராஜ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செய லாளர் எஸ்.கேசவன், தமிழ்நாடு முது நிலை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர்.சக்திவேல் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். 

சேலம்

சேலத்தில் நடைபெற்ற மனித சங் கிலி போராட்டத்தில் ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலை மையில் நடைபெற்றது. சேலம் திருவள் ளுவர் சிலை முதல் பெரியார் சிலை  வரை மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. இதில் ஜாக்டோ - ஜியோ உயர் மட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகர், நிர்வாகிகள் சுரேஷ், அர்த்தனாரி, திரு வேரங்கன், கோவிந்தராஜ், மகாராஜன், திருமுருகவேல், ஜான் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோடு ‌மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முதல் அரசு தலைமை மருத்துவ மனை வரை நடைபெற்ற மனித சங்கி லியை முத்துராமசாமி, நேரு, மணி, கும ரேசன், ரமேஷ், சரவணன், விஜயமனோ கரன், நளினி, இளங்கோவன் ஆகிய ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் கள் தலைமை வகித்து, போராட்டம் நடத்தினர். இதேபோன்று, தாளவாடி,  சத்தி,  கோபி, நம்பியூர், பெருந்துறை,  மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.