சேலம், செப்.24- ஏற்காடு, மாரமங்கலம் மலைக் கிராம மக்களின் 35 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் வகையில், தார்ச்சாலை அமைத்து இயக்கப் பட்ட அரசு பேருந்தை மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டையுடன் ஆடி, பாடி வரவேற்றனர். சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள மாரமங்கலம் மலைக் கிராம மக்களின் 35 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் வகையில், சாலையே இல்லாத மலைக் கிராமத் திற்கு தார்ச்சாலை அமைத்து பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது. இதை யொட்டி ஞாயிறன்று மலைக்கிராம மக்களால் பேருந்து சேவை துவங்கப் பட்டது. இப்பேருந்தில் மலைவாழ் மக் களுடன் சேர்ந்து பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் கூறுகையில், ஏற்காடு அருகே உள்ள மாரமங்கலம் ஊராட்சிக்குப் போது மான சாலை வசதிகள் இல்லாததால் சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றி வந்து ஏற்காடு அடையும் சூழ்நிலையில் இருந்து வந்தனர். இச்சூழ்நிலையில் மாரமங்கலம் ஊராட்சி கிராம மக்கள் தங்களுக்கு இரண்டு மலைகளை இணைக்ககூடிய வகையில் 2.6 கிலோ மீட்டர் இணைப்புச் சாலை வசதி செய்து கொடுத்தால் 25 கிலோ மீட்டர் தூரம் என்பது 4 கிலோ மீட்டராக குறை யும் என்று அப்பகுதி பொதுமக்கள் தமிழ்நாடு முதலவருக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் கோரிக் கைகள் விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து உரிய ஆய்வு செய்யப்பட்டு தற்போது ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் புதிய இணைப்புச் சாலை அமைக்கப்பட் டது. இதைத்தொடர்ந்து சனியன்று பேருந்து சோதனை ஓட்டம் நடத்தப் பட்டு, ஞாயிறன்று முதல் பேருந்து சேவை துவங்கப்பட்டது. இந்த மலைப் பாதையில் நடந்து வந்து தொய்வில் லாமல் பணிகள் மேற்கொண்டதால் இக்கிராம மக்களின் 35 ஆண்டுகால கனவு நிறைவடைந்துள்ளது. அதன் படி பேருந்து வசதி தொடங்கப்பட் டுள்ளதை மலைவாழ் மக்கள் உற்சா கமாக தாரை, தப்பட்டையுடன் ஆடி, பாடி பேருந்தை வரவேற்றது மகிழ்ச் சியை ஏற்படுத்தியது, என்றார்.