ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பெருமுகை ஊராட்சிக்குட்பட்ட தொட்டகோம்பை மலைகிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக் கள் ஊரக வேலை, மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட அவசர மற்றும் அன் றாட தேவைகளுக்கும் தொட்ட கோம்பை மலைகிராமத்திலிருந்து அடந்த வனப்பகுதி வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதில் வேலைக்கு செல்லும் ஆண்கள் இருசக்கர வாக னங்களிலும், ஊரக வேலைக்கு செல் லும் பெண்கள் நடந்தும் சென்று வரு கின்றனர். மேலும், பேருந்து வசதி இல்லதாதால் பெற்றோர்கள், ஆசிரி யர்கள் முயற்சியால் வாடகை வேன் மூலம் மலைவாழ் மக்களின் குழந்தை கள் பள்ளிகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். இதில் மலை வாழ் மக்கள் வேலைக்கு செல்ல வேண்டுமெனில் வனப்பகுதியில் வன விலங்குகளின் அச்சத்துடன் நாள் தோறும் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக கள்ளிப் பட்டியிருந்து கரும்பாறை, தொட்ட கோம்பைக்கு பேருந்து இயக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு கின்றனர். ஆனால், அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. தொட்டகோம்பையில் அங் கன்வாடி, தொடக்கப்பள்ளி இல்லாத தால் ஒரு சில குழந்தைகளை தவிர்த்து மற்ற சிறுவர், சிறுமியர் பெற்றோர்களு டன் வனப்பகுதியில் சுற்றி திரிவதாக வும், இதனால் குழந்தைகளின் எதிர் காலம் பாதிக்கப்படுவதாகவும் பெற் றோர்கள் வேதனை தெரிவிக்கின்ற னர். அவசர மருத்துவ சிகிச்சைகளுக் காக செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, தொட்டகோம்பை மலைவாழ் மக்கள் வனப்பகுதி வழி யாக அச்சமின்றி சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மலை வாழ் மக்களின் குழந்தைகளின் கல் வித்தரம் உயர அங்கன்வாடி மையம், தொடக்கப்பள்ளி அமைத்து தர வேண் டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். (ந.நி)