சீர்காழி, அக்.30- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வடக்கு வடகால் என்ற பகுதியில் சுமார் 100-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிலத்தடி நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி யில் நிலத்தடி நீர் காவி மற்றும் உப்பு நீராக உள்ளது. இந்த நீரை பழைய முறையில் எடுத்து சுத்திகரிப்பு செய்து குடிநீராக பயன்படுத்தி வரு கின்றனர். இதற்கு ஆகும் செலவு மிகவும் அதிகமாகிறது. முதலில் காவி மற்றும் உப்பு கலந்த மின்மோட்டார் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டு பழைய முறை யினாலான வடிகட்டுதல் முறைக்கு கரி கூழாங்கல், ஜல்லி மற்றும் மணல் கொட்டப்பட்ட தொட்டிக்கு அனுப்பப் படுகிறது. பின்னர் வடிகட்டப்பட்ட நீர் தொட்டியின் அப்பகுதியில் உள்ள குழாய்கள் மூலம் வெளியே காவியற்ற உப்பு நீராக மாறுகிறது. காவியிலிருந்து பிரிந்த நீர் உப்புதன்மையுடன் உள்ளது. இந்த உப்பு நீர் அருகில் உள்ள உப்பு நீரை நல்ல குடிநீராக மாற்றும் எந்திரத்துக்கு அனுப்பப்பட்டு உப்பு நீக்கப்பட்ட நல்ல குடிநீராக வெளியேறி இரும்பு குழாய் வழியாகச் சென்று நிலத்தடி நீர்த்தொட்டியில் சேமிக்கப்பட்டு பின்னர் நிலத்தடி நீர்த் தொட்டியிலிருந்து மின் மோட்டார் மூலம் எடுக்கப்பட்டு அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.
இந்த முறைப்படி 35 ஆயிரம் லிட்டர் காவி மற்றும் உப்பு கலந்த நீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டவுடன் 30 ஆயிரம் லிட்டர் வீதம் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கி றது. இந்த நீர் மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றப்பட்டு அங்கிருந்து தெருக்களு க்கு வழங்கப்படுகிறது. இந்த முறைப்படி பெறப்படும் குடிநீரை மட்டுமே வடகால் கிராம மக்கள் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இக்கிராமம் கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதால் நிலத்தடி முழு வதும் உப்பு மற்றும் காவி கலந்த நீராகவே உள்ளது. இந்த பழமையான நீர் சுத்திகரிப்பு முறை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த முறையில் நிலத்தடி நீரை குடிநீராக மாற்றுவ தற்கு ஊராட்சி சார்பில் பல மடங்கு தொகை செலவிட வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இதற்கான நிர்வாகச் செலவும் கூடுதலாகவே உள்ளது. எனவே இந்த பழமையான முறையை மாற்றி கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலம் வடகால் கிராமத்து க்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமப் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.