சூலூர், டிச. 21- சிப்காட் போன்ற தொழில் பூங் ்காக்கள் அமைப்பதற்கு விவசாயி களின் ஒப்புதலின்றி நிலங்களை அரசு கையகப்படுத்தாது எனவும், தமிழக முதல்வரின் நிலைப்பாடும் அது தான் என அமைச்சர் தா.மோ அன்பரசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற் பேட்டை மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டு விழா புதனன்று நடை பெற்றது. இதில், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங் கேற்று துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜி.திருமுருகன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கூட்டுறவு தொழிற்பேட்டையின் நிர்வாக அலுவலர்/தொழில் கூட்டுறவு அலு வலர் கு.சுகந்தி மற்றும் கருமத்தம் பட்டி நகராட்சி தலைவர் நித்யா, கிட்டாம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். விழாவினைத்தொடர்ந்து செய்தி யாளரிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், கிட்டாம்பாளையத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 316 ஏக்கர் கடந்த 2006 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆசியாவில் மிகப்பெரிய தொழிற்பேட்டை அமைப் பதற்காக கலைஞரின் வேண்டு கோளுக்கிணங்க திட்டமானது செயல் படுத்தப்பட்டது. அதிமுக பொறுப் பேற்ற பிறகு இத்திட்டம் பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.
நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு எந்த பயனும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. இதனை அடுத்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக நேரில் ஆய்வு செய்தோம். இதில், சாலைகள் அமைப்பது, குடிநீர் தொட்டிகள் அமைப்பது அலுவலக கட்டிடங்கள் ஆகியவை மேம்படுத்துவதற்காக 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அரசின் சார்பில் 10 கோடி ரூபாயும், பயனாளிகளின் தரப்பில் 14 கோடி ரூபாயும் மதிப்பீடு போடப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் நான்கு அல்லது ஆறு மாத காலத்தில் இவைகள் எல்லாம் நிறை வேற்றப்படும். ஒரு வருடத்தில் தொழிற் பேட்டை பயன்பாட்டிற்கு வரும். இந்த தொழிற்பேட்டை மூலம் நேரிடையா கவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள், என்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர் களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சிப்காட், தொழிற்பேட்டை போன்ற திட்டங்களுக்கு விவசாயிகளின் ஒப்புத லோடு தான் நிலம் கையகப்படுத்தப் படும். வாரப்பட்டி பகுதியில் விவசாயி கள் போராடி வருகின்ற ராணுவ தள வாடங்கள் தொழில் பூங்கா அமைப்ப தற்கான நிலம் கையகப்படுத்தலில் ஏற்கனவே நிலம் கையப்படுத்தப்பட் டுள்ளது. புதிதாக எந்த நிலமும் கைய கப்படுத்த மாட்டாது. விவசாயிகளின் ஒப்புதலின்றி தொழிற்பேட்டை அமைப் பதற்கு நிலங்களை அரசு கையகப்படுத் தாது என்றார்.