districts

img

திருப்பூரில் கொள்ளையடித்த கும்பல் நாக்பூரில் சிக்கியது

திருப்பூர், மார்ச் 6- திருப்பூரில் நகை கடையில் தங்கம், வெள்ளி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ஓடும் ரயிலில் வைத்து பீகாரை சேர்ந்த நான்கு  பேரை போலீசார் பிடித்தனர். திருப்பூர் புது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெய குமார் (45). இவர் கே.பி.என். காலனி 3 ஆவது வீதியில் நகைக் கடை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். கடந்த 3 ஆம் தேதி இரவு இந்த கடையின் கதவு உடைக்கப்பட்டு, 3.25 கிலோ  தங்க நகை, 28 கிலோ வெள்ளி, ரூபாய் 14.50 லட்சம்  ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்தனர். கடை அமைந்துள்ள இடம், சுற்று வட்டாரத்திலுள்ள சிசி டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.  இதில் நான்கு  பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில், திருப்பூரில் இருந்து ரயில் மூலமாக தப்பியது தெரிந்தது. தொடர் விசா ரணையில், மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஓடும் ரயி லில் வைத்து, நான்கு பேரை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், தனிப்படையினர் உஷார் படுத்தப்பட்டு, சேலம், சென்னைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். சென்னையில் ரயில்வே ஆர்.பி.எப்., போலீ சார் உதவியோடு கண்காணித்ததில், சென்னையிலிருந்து பீகார் வழியாக திரிபுரா செல்லும் ரயிலில், நான்கு பேர் செல் வது தெரிந்தது. அதன்பின், ஆர்.பி.எப்., போலீஸ் மூலம், நாக்பூரில் ஓடும் ரயிலில் பயணித்த, நான்கு பேரையும் போலீ சார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து, 3.25 கிலோ தங்க நகை, 28 கிலோ வெள்ளி, ரூபாய் 14.5 லட் சம்  ரொக்கம் ஆகியன கைப்பற்றப்பட்டது.  நாக்பூர் நீதி மன்றத்தில் நால்வரும் ஆஜர்படுத்தப்பட்டு, திருப்பூருக்கு அழைத்து வரப்பட உள்ளனர். இவ்வாறு, போலீசார் கூறி னர்.