பள்ளிபாளையம், பிப்.4- பள்ளிபாளையம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டை யில் ஒரு மாணவனின் கண்ணில் அடிபட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஒட்டமெத்தை பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று காலை 10 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள், விளையாட்டுத்தனமாக பள்ளியில் சண்டையிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரண மாக சண்டையில் ஈடுபட்ட ஒரு மாணவனுக்கு கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், இதுகுறித்து காய மடைந்த மாணவன் ஆசிரியர்களிடம் எதும் கூறவில்லை என தெரிகிறது. இதன்பின் மதிய நேரத்தில் மாணவன் தனக்கு கண் வலிப்பதாக பள்ளி ஆசிரியரிடம் தெரிவித் துள்ளார். அந்த மாணவனை வீட்டிற்கு செல்லுமாறு ஆசிரி யர்கள் கூறினர். இதனால் வீட்டிற்கு சென்ற மாணவனிடம், கண்ணில் காயம் ஏற்பட்டதை கண்டு பெற்றோர் விசாரித் தனர். அப்போது பள்ளியில் நடந்த விவரங்களை மாணவன் எடுத்துக் கூறினார். இதைக்கேட்ட மாணவனின் பெற்றோர் பள்ளி முன்பு நின்று, தனது மகனை தாக்கிய மாணவன் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், பள்ளிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பெற்றோரை சமரசம் செய்து அனுப்பி வைத் தனர். இதன் காரணமாக பள்ளி வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.