districts

img

சிலிண்டருக்கான முழு தொகையும் வழங்க வேண்டும்

ஈரோடு, நவ.23- சமையல் எரிவாயு உருளைக் கான முழு தொகையையும் அரசு  வழங்க வேண்டும் என தமிழ்நாடு  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்  மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோடு, வி.பி. சிந்தன் நினைவகத்தில் நடைபெற் றது. மாநில தலைவர் ரத்னமாலா தலைமை வகித்தார். இதில், தமிழ் நாடு அரசு அறிவித்துள்ள குழந்தை களுக்கு வாரத்தில் இரண்டு முட்டை கூடுதலாக வழங்கப்படும் என்பதை  வரவேற்கிறோம். அதேசமயத்தில் அப்பணிகளை முழுமையாகக் கொண்டு செல்ல முழுமையான எரி பொருள் வழங்க வேண்டும். சமை யல் எரிவாயு உருளைக்கான முழு  தொகையும் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  உதவியாளர்களுக்கு ஒரு நாள் தற் செயல் விடுப்பு வழங்க வேண்டும். சமையல் எரிவாயு உருளையை நிர் வாகமே மையத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அகில இந்திய மாநாடு அங்கன்வாடி மையங்களை தனி யார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி டிசம்பர் 6-9 வரை மதுரையில் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பது என தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, பொருளாளர் எஸ்.தேவமணி மற்றும் சிஐடியு  மாநிலச் செயலாளர் கோபிகுமார் உள் ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.