உதகை,மார்ச் 17- முதுமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ தூரத் திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக் கப்பட்டுள்ளது. 40 தீத்தடுப்பு ஊழி யர்கள் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை அரு கேயுள்ள, முதுமலை புலிகள் காப்ப கத்தில் புலிகள், காட்டு யானை கள், சிறுத்தைகள், மான்கள் உள் ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இதுதவிர விலை உயர்ந்த தேக்கு மற்றும் ஈட்டி மரங் களும் அதிகளவு உள்ளன. ஆண்டு தோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நீலகிரியில் பனிப்பொழிவு அதிகமாக காணப் படும். இச்சமயங்களில், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள செடி, கொடி கள் மற்றும் சிறிய மரங்கள் காய்ந்து போய் விடுகின்றன. அதேபோல், நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை இப்பகு தியில் மழையும் குறைந்து காணப்ப டும் நிலையில், இங்குள்ள நீரோடை கள், குளங்கள் மற்றும் குட்டைகள் காய்ந்து விடுவது வழக்கம். இத னால், இங்கு வாழும் விலங்குகள் நீரின்றி, நீர் நிலைகளை நோக்கி இடம் பெயர்கின்றன. இம்முறை யும் வழக்கம் போல் அதிக பனிப் பொழிவாலும், மழை பொய்த்த கார ணத்தினாலும், தற்போது முது மலை முழுவதும் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், பெரும்பாலான வன விலங்குகள் தற்போது முதுமலையை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர துவங்கி விட்டன. மேலும், புலிகள் காப்பகம் காய்ந்து போய் உள்ள நிலையில், தற்போது காட்டு தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள் ளதாகவும், காட்டு தீ ஏற்படாமல் இருக்க தீத்தடுப்பு காவலர்கள் நிய மிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதா கவும், ரோந்து பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதாக முது மலை புலிகள் காப்பக அதிகாரி கள் தெரிவித்தனர். இதுகுறித்து, முதுமலை புலி கள் காப்பக துணை இயக்குநர் அருண் கூறுகையில், முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட கூட லூர், மைசூர் தேசிய நெடுஞ் சாலை, மசினகுடி, தெப்பக்காடு நெடுஞ்சாலை உட்பட காப்பகத் திற்குட்பட்ட பகுதிகளில் 250 கி.மீ தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏராளமான கண்காணிப்பு கோபுரங் களில் இருந்து தீத்தடுப்பு ஊழி யர்கள் மற்றும் வனத்துறை ஊழி யர்கள் நாள்தோறும் கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காப்பகத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கி.மீக்கு ஒரு தீத்தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், காட்டு தீ ஏற்படாமல் இருக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நடவடிக் கையில் ஈடுபடுவார்கள். மேலும், புதிதாக 40 தீத்தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு எந்நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இது தவிர, புலிகள் காப் பத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக் கும் மக்களிடம் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை காட்டிற்குள் கொண்டு செல்லக் கூடாது எனவும், காட்டு தீ ஏற்படாமல் இருக்க உத விட வேண்டும் என தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம், என்று கூறி னார்.
குன்னூரில் பெரும் காட்டுத்தீ: அணைக்க வனத்துறை தீவிரம்
உதகையில் ஏறப்பட்ட காட்டுத் தீயை அணைக்க சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பாரஸ்ட் டேல் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனியார் தேயி லைத் தோட்டத்தில் கவாத்து பணி நடைபெற்றது. காய்ந்த செடிகளை தீயிட்டு எரிக்கும் போது தீயானது அருகே இருந்த வனப்பகுதிக்குள் பரவி மிகப் பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் பாரஸ்ட் டேல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பரவி பலவகையான மரங்கள் எரிந்து சேதமடைந்தது. இந்நிலையில் வனப்பகுதியில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கடந்த நான்கு நாட்களாக மாவட்ட வன அலுவலர் கௌதம் தலை மையிலான வனத்துறையினர், தீயணைப்பு துறை யினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு. அருணா, குன்னூர் பார்ஸ்டேல் பகுதியில் வனப் பகுதிக்குள் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை யினர்கள் ஏராளமானோரை வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு தீ பரவா மல் இருக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன. மேலும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்ட வன அலுவலர்கள் இணைந்து சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.