districts

img

தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

மேட்டுப்பாளையம், பிப்.12- காய்ந்து வரும் வனச்சாலையோர புதர்களால் காட்டுத்தீ  பரவும் அபாயம் உள்ளதால், காய்ந்த புதர்களை அப்புறப் படுத்தி காட்டுக்குள் தீப்பரவலை தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தின் வனம் சார்ந்த பகுதிலான மேட்டுப் பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக பகுதிகளில் வழக் கத்தை விட இவ்வாண்டு குறைவாகவே மழை பெய்துள்ளது என்பதோடு கடந்த இரு மாத காலமாக பனியின் தாக்கம் கடுமையாக உள்ளது. இரவில் பனியின் தாக்கம் அதிகரித் துள்ள அதேவேளையில் பகல் நேரங்களில் வெயிலும் அடிக்க துவங்கியுள்ளது. இதனால் வனத்தில் உள்ள செடி கொடி கள் காய்ந்து காட்டுத்தீ எளிதில் பரவும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. வன அளவை நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோள் உதவியோடு தீ பரவும் பகுதிகள் கண்கா ணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கும் வனத்துறையினர், காட் டுத்தீ பரவலை தடுக்க வன எல்லையோரங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியினை துவக்கியுள்ளதாக தெரி விக்கின்றனர்.

இதன்ஒருபகுதியாக சிறுமுகை வனச்சரக திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலையின்  இருபுறமும் அடர்ந்த காடுகள் உள்ளதால் இம்மலைப்பாதை யில் உள்ள சாலையோர புதர்கள் பனியாலும் வெயிலாலும் காய்ந்து சருகாக காட்சியளிக்கின்றன. இந்த வனம் சாலையில் பயணிப்போர் சிலர் புகை பிடித்துவிட்டு நெருப்புடன் சிகரெட் பீடி போன்றவற்றை வீசுவதால் சாலையோரம் காய்ந்து கிடக்கும் புதர்களில் எளிதில் தீப்பிடித்து இவை வனத்திற் குள் பரவி பெரும் காட்டுத்தீ உருவாக காரணமாகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது மேட்டுப்பாளை யத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் மலைச்சாலையில் ஓடந்துறை என்னுமிடத்தில் இருந்து குஞ்சப்பனை என்னுமி டம் வரை சுமார் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையோரத்தில் உள்ள காய்ந்த புதர்கள் அப்புறப்படுத்தபட்டு வருவதோடு வனத்திற்குள் தீப்பரவலை தடுக்க தீத்தடுப்பு கோடுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் உள்ளூர் பழங்குடியின மக்கள் மற்றும் வனத்துறையினர் என முப்பதிற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சாலையோரங்களில் காட்டுத்தீ  குறித்த விழிப்புணர்வு போஸ்டர்களை ஓட்டுவதோடு அவ்வ ழியே செல்லும் வாகனங்களை நிறுத்தி முன்னெச்சரிக்கை பிர சுரங்களையும் வழங்கி வருகின்றனர்.