சேலம், மே 2- தமிழ்நாட்டில் குறைந்தபட்ச கூலி சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி அரசுக்கு கோரிக்கை வைத்தார். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கம் சார்பில் 137 ஆவது மே தினம் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடு மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும். இறுதி வெற்றி சோசலிசத்திற்கே என்கிற பெரும் முழக்கத்தோடு மே தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி கட் சிகளும், இன்ன பிற கட்சிகளும் மே தின விழாவை கொண்டாடியது. இதன்தொ டர்ச்சியாக சேலம் காந்தி ரோடு பகுதி யில் இருந்து கோட்டை மைதானம் வரை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி நடைபெற்றது. கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட நிர்வாகி எஸ்.கே.தியாகராஜன் தலைமை ஏற் றார். ஏஐடிசி மாவட்ட செயலாளர் முனு சாமி வரவேற்புரை ஆற்றினார்,
இத னைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி சிறப் புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ் நாட்டில் தொழிலாளர்களை பாதுகாக்க உடனடியாக குறைந்தபட்ச கூலி சட் டத்தை அமல்படுத்த வேண்டும். விவசா யிகள் தொழிலாளர்கள் என அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் ஏற்ற வகை யில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். தொழிலாளி வார்க்கம் இன் னுயிர் தந்து போராடிப்பெற்ற 8 மணி நேர வேலை 8 மணி நேர தூக்கம் 8 மணி நேர ஓய்வு என்ற கோட்பாட்டை ஒன்றிய பாஜக அரசு சீர்குலைத்து வரு கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை ஏவி உழைப்பாளி மக்களின் உழைப்பை சுரண்டுகிறது. இதன்காரணமாக வேலை வாய்ப்பு கடுமையாக பாதித்து உள்ளது. டாக்டர் அம்பேத்கர் வகுத்து தந்த தொழிலாளர் நல சட்டத்தை, ஒன் றிய பாஜக அரசு தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களாக மாற்றி உள்ளது. 41 சட்டங்களை நான்கு தொகுப்புகளாக பிரித்து உழைக்கும் வர்க்கத்தை ஏளனப் படுத்துகிறது.
நாட்டின் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கப் பட்டு, பெரும் முதலாளிகளுக்கும், கார்ப் பரேட் நிறுவனங்களும் கொள்ளைய டிக்க வழி செய்துள்ளது மோடி அரசு. உழைப்பையே கொடுக்காமல் முதலா ளிக்கு அனைத்து வருமானமும் செல்கி றது. ஆனால், ஓடாய் உழைத்த உழைக் கும் வர்க்கத்திற்கு வறுமை மட்டுமே நீடிக்கிறது. தொழிலாளர்களுக்கு எதி ராக நடந்து கொண்ட அனைத்து பாசிச அரசுகளும் வீழ்ந்த வரலாறு தான் உள் ளது. ஹிட்லர் முசோலினி போன்ற கொடுங்கோல் ஆட்சியாளர்கள் வீழ்ச்சி தொழிலாளர்களின் புரட்சியால்தான் நடந்துள்ளது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி திவால் ஆகி வரும் சூழல் ஏற் பட்டுள்ளது, குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக டாலரின் மதிப்பு குறைந்துள் ளது. உழைப்பாளி மக்கள் ஆளும் சீன நாட்டின் யுவான் இன்று அமெரிக்க டாலரை பின்னுக்கு தள்ளி பொருளா தாரத்தில் முன்னுக்கு வந்துள்ளது. எனவே தொழிலாளர்களின் உழைப்பு தொழிலாளர்களின் நலன் சார்ந்த சோச லிச நாடுகளால் தான் இது சாத்தியமாக மாறி உள்ளது. ஒன்றிய பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் சிந்தாத்தை எடுத்துக் கொண்டு மக்களை சாதி, மத, இன பகை மையை மூட்டி பிளவு படுத்துகிறது. மறு புறம், மோடி அரசு பெரு முதலாளிக ளுக்கு அதுவும் குஜராத்தை சார்ந்த பல பெரு முதலாளிகளுக்கு இந்தியாவின் செல்வங்களை வாரி இரைத்து வரு கிறது, இதனால் நாட்டில் படித்த இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது.
கேரள மாநிலத்தில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது, மக்க ளின் தேவைக்கேற்ப அங்கு திட்டங்கள் வகுக்கப்படுகிறது. குறிப்பாக பழங்குடி யினர் தலித் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் இதுவரை 4 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. வீடு இல்லாத அனைவர்களுக்கும் குறிப்பாக பழங் குடியின தலித் மக்களுக்கு வீடு கட்டித் தருவது முன்னுரிமை திட்டம் எனவும் செயல்படுத்துபட்டு வருகிறது. அரசுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் காண்ட்ராக்ட் முறை முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டும். அனைத்து தொழிலாளர் கள் மற்றும் ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பை தமிழக அரசு உத்தரவாதப் படுத்த வேண்டும். தொழிலாளி மற்றும் உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளை அரசு ஏற் றால்தான் மே தினத்தின் மாண்பு அனை வருக்கும் புரியும். தமிழக முதல்வர் சிவப்பு சட்டை அணிவது தொழிலாளர்க ளின் வெற்றியில்தான் இருக்க வேண் டும். அப்போதுதான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என முதல்வருக்கும், முதல்வர் என்ன கூறுகிறார் என மக்க ளுக்கும் புரியும், என்றார்.
முன்னதாக இந்நிகழ்வில், ஏஐடி யுசி மாநில நிர்வாகி காசி விஸ்வநா தன், சிஐடியு மாவட்ட நிர்வாகி ஆர். வெங்கடபதி, உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். முடிவில் சிஐடியு மாவட்ட செயலா ளர் ஏ.கோவிந்தன் நன்றி கூறினார். மே தின பேரணி, பொதுக்கூட்டத்தில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.
கோவை
கோவையில் கொட்டும் மழையிலும் மேதின பேரணி, பொதுக்கூட்டம் எழுச்சி யோடு நடைபெற்றது. சிஐடியு, ஏஐடி யுசி தொழிற்சங்கங்கள் இணைந்து நடத் திய மேதின பேரணி, வடகோவை சிந்தா மணியில் இருந்து துவங்கியது. பல் வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, ஆர்.எஸ்.புரம் பரியல் மைதா னத்தில் நிறைவடைந்தது. அங்கு நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட கவுன்சில் செயலாளர் சி.தங்க வேலு தலைமை ஏற்றார். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் பி.சந்திரன் வரவேற்புரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற குழு தலைவர் பி.ஆர்.நடராஜன், ஏஐடியுசி மாநில செயலாளர் எம்.ஆறு முகம், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அகில இந் திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்ட செயலாளர் கே.துளசிதரன், ஏஐ டியுசி நிர்வாகி சுப்பிரமணியன் ஆகி யோர் மேதின உரையாற்றினர். இந்த பேரணி பொதுக்கூட்டத்தில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர். முடி வில், சிபிஎம் மேற்கு நகரக்குழு செயலா ளர் பி.சி.முருகன் நன்றி கூறினார். இதேபோன்று சிஐடியு கோவை மாவட்ட இன்ஜினியரிங் சங்கத்தின் சார் பில் நடைபெற்ற மேதின கொடியேற்று விழா டெக்ஸ்மோ குரூப், அக்குவா குரூப், சாம்டர்போ குருப், சின்தடிக் கம் பெனிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில், சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சுப்பரமணி யம், செயலாளர் சி.துரைசாமி, பொரு ளாளர் ஏஜி.சுப்பிரமணியம் மற்றும் வி. பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங் கேற்று மே தின உரையாற்றினர்.
ஈரோடு
ஈரோட்டில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், மேம்பாலத்தின் கீழ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐ டியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணி யன் தலைமை ஏற்றார். இதில் சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம், தமிழ் நாடு விவசாயிகள் சங்க தலைவர் துளசி மணி (சிபிஐ) ஆகியோர் உரையாற்றி னர்.