districts

img

“திணிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தகர்த்து முன்னேற வேண்டும்”

உதகை, நவ.16- பெண்களிடம் திணிக்கப்பட் டுள்ள கட்டுப்பாடுகள், தடைகளை தகர்த்து முன்னேற வேண்டும் என ராணுவத்தில் லெப்டினன்டாக தேர்வு செய்யப்பட்டுள்ள நீலகிரி படுகர் இன முதல் பெண் தெரி வித்துள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள உபதலை கிராமத் தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் பெங்களூரு ராஷ்ட்ரிய ராணுவ பள் ளியில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் பவித்ரா. சிறுவயதிலிருந்தே தந்தை  ராணுவத்தில் பணியாற்றியதால் தந்தையின் மிடுக்கான செயல்பாடு களை பார்த்து ரசித்த பவித்ராவுக் கும், ராணுவத்தில் சேர்ந்து பணி யாற்ற வேண்டும் என்று ஆசை ஏற் பட்டுள்ளது.  இதனையடுத்து தனியார் கல் லூரியில் இளங்கலை வணிகவியல் முடித்து, ஸ்டாப் செலக்சன் தேர்வு  எழுதி, சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், 9 மாத காலம் பயிற்சி பெற்றார்.

இதைத்தொடர்ந்து பயிற்சி நிறைவடைந்து லெப்டி னன்ட்டாக தேர்வு செய்யப்பட்டிருக் கிறார். இவர் நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனத்திலிருந்து லெப்டி னன்ட்டாக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.  பவித்ரா ஆரம்ப கல்வி மும்பை யிலும், ஆறாம் வகுப்பு முதல் பெங் களூர் ராஷ்டிரியா மிலிட்டரி பள்ளி யிலும் படித்தார். இவர் என்சிசி  (NCC)யில் ஏ கிரேட் பெற்றுள்ளார்.  கடந்த அக்.29 ஆம் தேதி சென்னை யில் நடைபெற்ற சத்தியப் பிரமாண  நிகழ்ச்சியில் சிறந்த பயிற்சி பெற்ற மைக்கான வாள் மற்றும் வெள்ளிப் பதக்கத்தையும் பரிசாக பெற்றிருக் கிறார். ஜம்மு காஷ்மீரில் பொறுப் பேற்க இருக்கும் பவித்ரா, சொந்த  ஊருக்கு வருகை தந்த அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து கொண்டாடினர். மேலும், ஹாக்கி நீலகிரி அமைப்பு சார்பி லும் அவருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. இதுகுறித்து லெப்டினன்ட் பவித்ரா கூறுகையில், நாடு எவ்வ ளவு முன்னேறி இருந்தாலும் தற் போது வரை சமுதாயத்தில் பெண் களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. பெண்களுக்கு விரை வாக திருமணம் செய்து வைக்கப் படுவது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது போன்றவைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக் கப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் என எது இருந் தாலும் நமது மனம் எதை சொல்கிற தோ அதை கேட்டு செயல்பட வேண் டும். பெற்றோரை பெருமைபடுத் தும் விதமாகவே, நமது குறிக்கோள் கள் இருக்க வேண்டும், என்றார்.