திருப்பூர், டிச.21- மணியக்காரம்பாளையத்தில் உள்ள பனி யன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள் மற்றும் உபகரணங்கள் தீக்கிரையாகின. திருப்பூர் மணியகாரம்பாளையம் நொய் யல் ஆற்று சாலையில் பார்த்தசாரதி என்பவ ருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஷ்யாம் என்ப வர் பனியன் நிறுவனத்தின் பேக்கிங் மற்றும் கொரியர் கிளையை நடத்தி வருகிறார். இந்நி லையில், சனியன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது, ஆடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகு தியில் தீப்பற்றியுள்ளது. இதையடுத்து திருப் பூர் தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தக வல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று தீய ணைப்பு வாகனங்கள், மற்றும் 10 க்கும் மேற் பட்ட தண்ணீர் லாரி உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிறுவ னத்தின் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாததால், பொக்லைன் இயந்திரம் வர வழைக்கப்பட்டு சுற்றுச்சுவரை இடித்து தீ அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீய ணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள் மற்றும் உபகரணங் கள் தீக்கிரையாகின. இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.