districts

img

இறந்தவரின் உடலை ஆற்றில் இறங்கி சுமந்து செல்லும் அவலம்

கோவை, பிப்.1- மயானத்திற்கு செல்ல வசதிகள் இல்லாததால் ஆற்றில் இறங்கி, இறந்தவரின் உடலை சுமந்து செல் லும் அவலம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் அரங்கேறியுள் ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூர் கிரா மத்தில் மதுரை வீரன் கோவில் நகர்  பகுதி உள்ளது. இந்த நகர் பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இம்மக்களின் பெரு பகுதியினர் கூலி வேலைக்கு சென்று  அன்றாடம் வாழ்க்கை நடத்தி வரு பவர்களாக இருக்கின்றனர். இவர் கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளே செய்து கொடுக்கப்பட வில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பி வந்தாலும், வாழும் காலத்தில்தான் உரிய வசதி கள் செய்து தரப்படவில்லை, இறந்த பின்னரும் உடலை புதைக்க அவதிக் குள்ளாவதாகவும், ஆற்றில் இறங்கி உடலை சுமந்து சென்று புதைக்க  வேண்டிய அவலம் இருப்பதாக தெரி விக்கின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் யாரா வது உயிரிழந்தால்  அருகில் உள்ள  தனியார் தோட்டம் வழியாக இறந்த வரின் உடலை சுமந்து கொண்டு ஆற் றின் வழியாக கொண்டு செல்கி றோம். மழைக்காலங்களில், இறந்த வர்களின் உடலை கயிறு  மூலமாக கட்டி உடலை மறுகரைக்கு கொண்டு சென்று சுடுகாட்டில் புதைக்க வேண் டிய நிலை உள்ளது.  பல வருடங்க ளாக துறைசார்ந்த அதிகாரிகளிடம் ஆற்றை கடக்க சிறு பாலம் அமைத்து தர மனு அளித்தும் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.  தமிழக முதல்வர், சட்டமன்றத் தில் ஒவ்வொரு தொகுதியிலும் தீர்க்கப்படாத பத்து பிரச்சனைகளை உங்கள் தொகுதியில் முதல்வர் திட் டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும், அதனை உடனடியாக தீர்க்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அந்த வகையில் எங்களது பிரச்சனைகளை அறிந்து தமிழக அரசு சிறுபாலம் அமைத்து தர வேண்டும். இத்தொகுதியில் அதி முக சட்டப்பேரவை உறுப்பினர் எங் கள் பிரச்சனைகளை முதல்வரின் கவ னத்திற்கு கொண்டு செல்ல வேண் டும் என வலியுறுத்தியுள்ளனர்.