districts

தவறுதலாக செலுத்திய பணத்தை தராமல் 20 மாதமாக இழுத்தடிக்கும் மின்வாரியம்

திருப்பூர், நவ. 27 - திருப்பூர் மின்வாரியத்தில் தவறுதலாக செலுத்திய பணத்தை திரும்ப தராமல் 20  மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வரு கின்றனர். இந்த பணத்தை பெற்றுத் தரும் படி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக் கப்பட்டுள்ளது. திருப்பூர் முத்தணம்பாளையம்  பாலாஜி நகர் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் எஸ்.சாம்பசிவன் (70). ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மகன் செல் வன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த  வீட்டிற்கு மும்முனை மின்சாரம் இணைப்பு  பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருக்கி றார். அதற்கு ரூ.8ஆயிரத்து 368 செலுத்தும் படி மின்வாரியத்தினர் கூறியுள்ளனர். இதில் தனது மகன் செல்வன் பெயரில் இந்த  பணத்தை செலுத்துவதற்கு பதிலாக, தனது  பெயரில் ரூ.8 ஆயிரத்து 368-ஐ கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி மின்வாரியத்திற்கு செலுத்தியிருக்கிறார். மகன் பெயரில் மின் இணைப்புக் கேட் டதற்கு, தனது பெயரில் மின் வாரியத்தில் பணம் செலுத்தியதால் அதை ஏற்க முடி யாது என மின்வாரியத்தில் மறுத்துவிட்டனர். இதையடுத்து தனது பெயரில் தவறுதலாக செலுத்திய பணத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரி  உரிய சான்றுகளுடன் மின்வாரிய செயற்பொறியாளருக்கு கடந்த 2022 ஆம்  ஆண்டு மார்ச் 16ஆம் தேதி கடிதம் கொடுத் திருக்கிறார். அத்துடன் அதிகாரிகளிடம் நேரில் விபரத்தைத் தெரிவித்து கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் 10 மாதங்களுக்கு மேலாக எந்த  பதிலும் தரவில்லை. இதையடுத்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கடந்த 2023ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி மனு  அனுப்பி இருக்கிறார். அதற்கு நிதி ஒதுக் கீட்டுக்குப் பிறகு பணம் திரும்பக் கிடைக் கும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது வரை 20 மாதங்கள் கடந்து விட்டது. இன்னும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை.  இதனால் கவலையுடன், மன உளைச் சல் அடைந்திருப்பதாகக் கூறி, தனக்கு வர  வேண்டிய தொகையை தனது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்.