districts

img

சுத்திகரிக்கப்பட்ட பின் சாயநீரை வெளியேற்ற வேண்டும்

நாமக்கல், ஜன.12- சாயக்கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாயப்பட்டரை உரிமையாளர் களிடம் அதிகாரிகள் உறுதிபட தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி அலுவ லகத்தில் வியாழனன்று பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிபாளை யம் நகராட்சி (பொறுப்பு) ஆணையாளர் ரேணுகா தலைமை தாங்கினார்.  பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் இயங்கும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். வருங்காலங்களில் சுத்திகரிக்கப்படாமல் சாயக்கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தனர்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகர மன்ற தலைவர் மோ. செல்வராஜ், நகர் மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், சாயப்பட்டறை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.