இளம்பிள்ளை, பிப்.23- சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்றனர். சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான வாக்கு எண்ணும் பணி அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடை பெற்றது. இதில், 60 வார்டுகளில் திமுக 46, அதிமுக 7, விசிக 1, காங்கி ரஸ், சுயேட்சைகள் தலா 3 வார்டு களில் வெற்றி வாகை சூடினர்.
எடப்பாடி நகராட்சியை கைப்பற்றிய திமுக
மேட்டூர் நகராட்சியில் 30 வார் டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பா ளர்கள் 21 வார்டுகளில் வென்று நக ராட்சியை கைப்பற்றினர். அதிமுக 5 வார்டுகளிலும், சுயேட்சைகள் 4 வார் டுகளிலும் வெற்றி பெற்றனர். இதே போல், பேரூராட்சியாக இருந்த இடங்கணசாலை, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல்முறை யாக தேர்தலை சந்தித்தது. இதில், 27 வார்டுகளில் 15 இடங்களில் திமுக வும், 8 இடங்களில் பாமகவும், அதி முக, சுயேட்சைகள் தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர். இதேபோல் ஆத்தூர், நரசிங்கபு ரம், எடப்பாடி, தாரமங்கலம் உட்பட 6 நகராட்சிகளில் வாக்குகள் தனித் தனியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக 5 நகராட்சிகளையும், அதிமுக 1 நக ராட்சியையும் கைப்பற்றியது. குறிப் பாக, எடப்பாடி நகராட்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பா ளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி வசிக்கும் வார்டிலும் திமுக வேட்பாளரே வெற்றி பெற்றார்.
31 பேரூராட்சிகளில் 27 திமுக வசம்
இளம்பிள்ளை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் உள்ளன .நடந்து முடிந்த தேர்தலில் திமுக 11 இடங்க ளையும், அதிமுக 2 இடங்களையும், பாமக, சுயேட்சைகள் தலா 1 இடத்தி லும் வெற்றி பெற்றன. தொடர்ந்து நான்காவது முறையாக இளம் பிள்ளை பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. இதேபோல், பனம ரத்துப்பட்டி பேரூராட்சியில் 15 உள்ள வார்டுகளில் திமுக 11 இடங்க ளையும், அதிமுக 4 இடங்களையும் வெற்றது. மல்லூர் பேரூராட்சியில் 7 இடங்களில் சுயேட்சைகள், 3 இடங்களில் திமுக, 5 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில், திமுக 13 இடங்களிலும், அதிமுக, சுயேட்சை தலா ஒரு இடத்தையும் வென்றனர். பேரூராட்சிகளை பொறுத்த வரையில் மொத்தமுள்ள 31 பேரூ ராட்சிகளில் 27 இடங்களில் திமுக வும், 1 இடத்தை அதிமுகவும் கைப் பற்றியுள்ளது. மல்லூர், பேளூர், வீரக்கல்புதூர் ஆகிய 3 பேரூராட்சி களில் எந்த கட்சிக்கும் தனிபெரும் பான்மை கிடைக்கவில்லை