districts

நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்

மதுரை, ஏப், 28 -நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் திமுக வெற்றிபெறும் என லயாலோ கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக அக்கல்லூரி முன்னாள்மாணவர்கள் மதுரையில் ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்து பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில் லயாலோ கல்லூரி முன்னாள் மாணவர்கள், அந்தத் தொகுதி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினர். இந்த ஆய்வு ஏப். 14-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்பட வேண்டும். சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படு வது போன்றவைகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.வாக்குக்கு பணம் கொடுத்தாலும் மக்களவைத் தேர்தலில் அதற்கு எதிராக வாக்களித்துள்ளோம் என்று பெரும்பாலான மக்கள் கூறியுள்ளனர். கடந்த கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியிருந்தோம்.ஆனால் தற்போது மக்களின் கருத்துக்களை பார்க்கும் போது அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

;