உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தருமபுரி, பிப்.1- “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடுகள், பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவை கள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து டி.துரிஞ்சிஅள்ளியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் அடிப் படை தேவைகள் குறித்து கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பொதுமக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசால் அறிவித்து செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி பகுதிகளில் வசிக்கும் தகுதியான பொதுமக்க ளுக்கு கிடைத்த வேண்டும். வளர்ச்சி திட்டப்பணிகளை குறிப் பிட்ட கால அளவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வுகளின்பொது ஆவின் பொதுமேலா ளர் மாலதி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜ சேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன், மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், பாப்பி ரெட்டிப்பட்டி செயல் அலுவலர் கலைராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர் விபத்துகள் ஏற்படும் சாலையில், வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
நாமக்கல், பிப்.1- தொடர் விபத்துகள் ஏற்படும் பள்ளிபாளையம் – சங்ககிரி சாலையில், வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - சங்கிகிரியை இணைக்கும் பகுதியில், பிள்ளையார் காட்டூர் என்ற பகுதி அமைந்துள்ளது. சேலம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிக ளுக்கு அதிகளவு வாகனங்களும், கனரக வாகனங்களும், செல்லும் சாலையாக இந்த சாலை உள்ளது. மறுபுறம் ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளின் பிரதான சாலை யாகவும் இது விளங்கி வருகிறது. 24 மணி நேரமும் போக்குவ ரத்து அதிகம் மிகுந்த பகுதியாக காணப்படும் இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மாதத்திற்கு குறைந்தபட்சம் மூன்று முறையா வது விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், மிகவும் தாழ் வான சாலையாகவும், குறுகலான சாலையாகவும் இருப்ப தால், வேகமாக வரும் வாகனங்கள் எதிர் திசையில் இருந்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் திரும்பும் பொழுது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டு வருகி றது. சாலையின் ஒருபுறம் வெப்படை புற காவல் நிலைய எல் லையும், மற்றொருபுறம் பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லையும் இருப்பதால், இரு காவல் நிலைய போலீசாருக் கும் இந்த விபத்து குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் விபத்தை தடுக்கும் வகையில், பிள்ளையார் காட்டூர் பகுதி பிரதான சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும், என்றனர்.
வேகத்தடையில் “ரிப்லக்ட் லைட்” மக்கள் கோரிக்கை
தருமபுரி, பிப்.1- இலக்கியம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் “ரிப்லக்ட் லைட்” பொருத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி நகரத்தையெட்டி இலக்கியம்பட்டி, அழகாபுரி, அண்ணா நகர், செந்தில் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் இரவு நேரங்களில் சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் காலையிலும், மாலையிலும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அந்த சாலையை கடந்து செல்ல உதவியாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை தெரியும்படி, “ரிப்லக்ட் லைட்” பொருத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தல்
தருமபுரி, பிப்.1- செட்டிகரை அன்னை இந்திரா குடி யிருப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி ஒன்றியம், செட்டிக்கரை ஊராட்சிக்குபட்டது செட்டிக்கரை அன்னை இந்திரா குடியிருப்பு பகுதி. இப்பகுதியில் தலித் மக்கள் அதிகள வில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நிலமற்ற ஏழை தினக்கூலி தொழிலாளர்களாவர். இங்குள்ள தெருக்களுக்கு சிமெண்ட் சாலை அமைக்கப்படாததால், பல ஆண்டுக ளாக குண்டும் குழியுமாக உள்ளது. மண்சாலையில் புல் வளர்ந்து வயல் வரப்பு போன்று காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் மண்சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் முதியோர் மற்றும் குழந்தைகள் வழுக்கி விழுந்து காயமுறுகின்றனர். மேலும், இங்கு கழிவுநீர் கால்வாய் இல்லாத தால், பல வீடுகளில் குழிவெட்டி, அதில் கழிவுநீர் நிரப்புவதும், தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுவதுமாக இருக் கிறது. இதனால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டுகிறது. ஜல் ஜீவன் சக்தி திட் டத்தின் மூலம் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. இதில் தண்ணீர் வருவதில்லை. இதுநாள் வரை ஒகே னக்கல் குடிநீரும் வழங்கப்படவில்லை. இதனால் சுகாதாரமற்ற உப்பு தண்ணீ ரையே இப்பகுதியினர் குடித்து வரு கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண் டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
நகர்மன்ற கூட்டம்
நாமக்கல், பிப்.1- நாமக்கல் நகராட்சி கூட்ட ரங்கில், புதனன்று நகர்மன்ற கூட்டம், தலைவர் து.கலா நிதி தலைமையில் நடைபெற் றது. இதில், மாவட்ட நீதிமன் றங்களில் நகராட்சி ஆணை யருக்கு எதிராக அதிகப்படி யான புகார் வருவதால், அரசு தரப்பு வழக்குரைஞராக அமுதவல்லியை நியமிக்க லாம். ரூ.92 லட்சம் மதிப் பீட்டில் தார்சாலை பணிகள் துவங்குவது, நகராட்சி பூங் காக்கள், கழிவறைகளை பராமரிக்க ஒப்பந்தப்புள்ளி கோருவது என 59 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
வெங்கமேடு கோயில் பூசாரி கொலை வழக்கு: கொலையாளிக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர், பிப். 1 – திருப்பூர் வெங்கமேடு ஆத்துப்பாளையம் சாலையில் கண்ணிமார் கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு வெங்கமேட் டைச் சேர்ந்த சுப்பிரமணி (72) பூசாரியாக செயல்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு அந்த கோவில் காம்பவுண்ட்டிற் குள், சுப்பிரமணியை அடித்து கொலை செய்து எரிக்கப்பட்டு உடல் கருகிய நிலையில் காணப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யவும், வெங்கமேடு அங்கேரிபா ளையம் பகுதியில் சமூகவிரோத செயல்களை தடுக்கவும் வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி யது. இந்நிலையில், அனுப்பர்பாளையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு ஜனவரி 14 அன்று சதீஷ்கு மார் (எ) சதீஷ் (வயது 30) என்பவரை கைது செய்த னர். திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து புதனன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். கொலையாளி சதீஷ்குமார் (எ) சதீஷுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.ஐந்தாயிரம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு உள்ளூர் மக்களை புறக்கணித்த நிர்வாகம்
அவிநாசி,பிப்.1 அவிநாசியில் அமைந்துள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத் திற்கு உள்ளூர் மக்களை புறக்கணித்துள் ளதாக அனைத்து கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அனைத்து கட்சி தலைவர்கள் கூறுகையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கும்பாபி ஷேகத்தில் அன்றைக்கும் யாரையும் மதிக்க வில்லை, தற்பொழுதும் யாரையும் மதிக்கவில் லை, அறங்காவலர் குழு தலைவராக பப்பிஸ் சக்திவேல் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒழுங்கு படுத்திக் கொள்வதாக தெரிவித்தார். தற்பொ ழுதும் இதே நிலைதான் நீடிக்கிறது. கடந்த காலங்களில் திருவிழா நடைபெறும் போது அனைத்து கட்சியினரும் பல்வேறு தரப்பின ரையும் அழைத்து ஆலோசனை நடத்து வார்கள். இப்போது கண்டுகொள்ளாத நிலை தான் உள்ளது. பத்திரிக்கையாளருக்கும் கூட பாஸ் வழங்காமல் இழுத்தடிப்பு செய்துள்ள னர், பத்திரிக்கையாளரே பாஸ் என்பது போராடி பெற வேண்டிய சூழல் உள்ளது. அவிநாசி யில் 31 ஊராட்சி மற்றும் நகராட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட அழைப்பு கொடுக்க வில்லை. மின்சார வாரியத்திற்கு கூட முறை யாக பாஸ் வழங்காமல் இருப்பது கண்டிக்கத் தக்கது. இது போன்ற செயல்கள் எதிர்கா லத்தில் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர் வாகமும் தமிழக அரசும் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். முன்னதாக இக்கூட்டத்தில், சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, ஒன்றிய செய லாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பழனிச் சாமி, சிபிஐ ஒன்றிய செயலாளர் முத்து சாமி, காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன், மதிமுக ஒன்றிய நிர்வாகி பாபு, கொமதேக நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
உடுமலை, பிப்.1- உடுமலை உட்கோட்ட காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, ஜிவிஜி மகளிர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணி மற்றும் உறுதிஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உடுமலை பேருந்து நிலையத்தில் துவங்கிய சாலைப் பாது காப்பு விழிப்புணர்வு பேரணிக்கு உடுமலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார் தலைமை வகித்தார். எண் ணம் போல் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் வரவேற்றார். இதில் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரி மாண விகள் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பதாகை கள் ஏந்தி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி னர். இந்த ஊர்வலம் உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து காமராஜர் சிலை வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு விழிப்பு ணர்வு குறித்து மாணவிகள் இடையே பேசினார். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சி யர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், போக்குவரத்து உதவி ஆய் வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் சரவணகுமார், நூலகர் கணேசன்(ப.நி) ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலத் தில் ஜிவிஜி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவ லர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிறுவனுக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
உதகை, பிப்.1- 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதி யவருக்கு உதகை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த தேவர்சோலை பகு தியை சேர்ந்தவர் அப்துல் சலாம்(65). இவர் அந்தப் பகுதியில் ஜீப் டிரைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15-1-2023 தேதி யன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி தேவர் சோலை பகுதி யில் கபடி போட்டிகள் நடந்தது. இதை பார்ப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சென்றனர். அப்போது 7 வயது சிறுவனை ஏமாற்றி அழைத்து சென்று அப்துல் சலாம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவன் பெற்றோரி டம் தெரிவித்துள்ளார். சிறுவனின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இத னைத்தொடர்ந்து, ஆய்வாளர் வெங்கடேஸ்வரி தலைமை யில் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்ப திவு செய்து அப்துல் சலாமை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றம் நடந்து வந்தது. இந்நி லையில் வழக்கில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப் பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். இதைத் தொடர்ந்து அப்துல் சலாம் கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.
விவசாய உரத்தை வெடிபொருள் என விற்ற 5 பேர் மீது வழக்கு பதிவு
கோவை, பிப். 1- சென்னனூர் பகுதியில் உரத்துடன் வேதிப் பொருள்களை கலந்து வெடிபொருள் என விற்க முயன்ற 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சென்னனூரில் ஆன்லைன் மூலமாக சந்தேகம் ஏற்படும்படியாக சில பொருட்களை ஒரு கும்பல் சிலரிடம் விற்க முயன்றதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறை சந்தேகத்தின் பேரில் ஹிதாயத், அர்சாத், முகமது உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மாதம்பட்டி அருகே உள்ள சென்னனூரில் கிடங்கு வாடகைக்கு எடுத்து சில மூட்டைக ளில் வேதிப்பொருட்களை பதுக்கி இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து காவல்துறையினர் சென்னனூருக்கு சென்று அந்தக் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது கிடங்கில் சில மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் அங்கு வந்து சோதனை நடத்தினர். அதில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் பொட்டாசி யம் உரம் என்பதும் அது வெடிபொருள் இல்லை என தெரி யவந்தது. மேலும் பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசார ணையில் அவர்கள் அனைவரும் கோவையை சேர்ந்தவர் கள் என்றும் இணையதளம் மூலம் வியாபாரிகளிடம் இருந்து உரத்தை வாங்கி பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட சில பொருள்க ளுடன் கலந்து வெடிமருந்து எனக்கூறி இணையம் மூலமாக விற்க முயன்றதும் தெரியவந்தது. இதை அடுத்து ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கான நடவடிக் கைளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலமுகவர்கள் அமைச்சரிடம் மனு
ஈரோடு, பிப். 1- நிலம் விற்று கொடுத்த தரகர்களுக்கு முறையாக வர வேண்டிய கமிசன் தொகையை பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட நிலமுகவர்கள் மற்றும் தரகர்கள் சங் கத்தினர் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி யிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்ட நிலமுகவர்கள் மற்றும் தரகர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், எங் கள் சங்கத்தில் 100க்கும் மேற்பட்ட நிலத்தர கர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். நாங்கள் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் பூமி, மனை, வீடு ஆகியவற்றை விற்பவர்க ளுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையே விலை நிர்ணயம் செய்து கிரயம் செய்து, அதற்குரிய நியாயமான கமிசனை பெற்று தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் எங்கள் சங்க உறுப்பினர் கள் எஸ்.அப்பாசாமி மற்றும் இ.எல்.குண சேகர் ஆகியோர் வீரப்பன்சத்திரம், நல்லி தோட்டம், நசியனூர் ரோடு பகுதியில் உள்ள பூமியை, ஈரோடு தனியார் மெடிக்கல் சென்டர் உரிமையாளருக்கு பேசி முடித்துள்ளனர். டோக்கன் அட்வான்ஸ் கொடுத்த நிலையில், கிரயம் செய்து கொடுக்கும்போது மீதி தொகையை செலுத்துவதாக பேசி முடிக்கப் பட்டது. பின்னர் தரகர்களுக்கு கொடுக்க வேண் டிய கமிசன் தொகையை ஏமாற்றும் பொருட்டு, அவர்களுக்குத் தெரியாமல் ரூ.12 கோடி செலுத்தி நிலத்தை கிரயம் செய்து விட்டனர். இதில் கமிசனமாக வாங்கியவர் தரப்பில் ஒரு விழுக்காடு வீதம் ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அதேபோல விற் பவர் தரப்பிலும் தரகு தொகை தரவில்லை. இதுகுறித்து நேரில் தொடர்பு கொண்டு கேட்ட போது, கமிசன் தர முடியாது என்று கூறிவிட்ட னர். ஆகவே தாங்கள் இது சம்பந்தமாக விசா ரணை செய்து எங்கள் சங்க உறுப்பினர்க ளுக்கு வர வேண்டிய தரகர் தொகை ரூ.24 லட் சத்தை பெற்றுத்தருமாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் பிரச்சனை: உதகை நகர்மன்றத்தில் காரசாரம்
உதகை, பிப்.1- சுற்றுலாத்தளமான உதகையில் பார்க்கிங் பிரச்சனை அதிகரித்து வருகிற நிலையில், இது குறித்த காரசாரமான விவாதம் உதகை நகர் மன்றத்தில் எதிரொலித்தது. உதகை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் புதனன்று நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில், துணை தலைவர் ரவிக்குமார், ஆணையாளர் ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதகை நகர்மன்ற கூட்டத்தில் பல்வேறு பொருள்கள் குறித்து மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக குடிநீர் விநியோ கம், சுகாதார பிரச்சனை, தெருவிளக்கு பிரச் சனை உள்ளிட்டவைகள் எதிரொலித்தது. முன்னதாக திமுக நகர் மன்ற உறுப்பினர் ஜார்ஜ் பேசுகையில், நகர்மன்ற கூட்ட அரங்கு பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. அதனை சரி செய்திட வேண்டும். நகராட்சியின் முக் கிய வருவாயாக வரி வசூல் உள்ளது. ஆனால் சாப்ட்வேர் பிரச்சனை இருப்பதாக தெரிகி றது. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏழை எளிய மக்கள் கட்டிடங்கள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை. ஆனால் ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக கட்டுமானங்கள் நடை பெற்று வருகின்றன என குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த ஆணையாளர் ஏகராஜ், வரி செலுத்த ஏதுவாக கூடுதல் கவுண்டர் அமைக்கப்படும். ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் நடைபெறும் கட்டுமானம் தொடர்பாக நோட் டீஸ் வழங்கப்பட்டு சீல் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார். இதனைத்தொடர்ந்து காங்கி ரஸ் உறுப்பினர் நாகராஜ் பேசுகையில், காந்தி யடிகள் உள்ளிட்ட தேச தலைவர்களின் நினைவு நாளான்று மக்களிடையே அதனை நினைவுபடுத்தும் வகையில் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் சங்கொலி எழுப்பப்படும். ஆனால் நேற்று காந்தியடிகளின நினைவு நாளான்று சங்கொலி எழுப்ப அதிகாரிகள் மறந்து விட்டனர். இதுபோன்று அனைத் தையும் நாம் மறந்து விடுவதால் தான் வீணாய் போன ஆளுநர் எல்லாம் சுதந்திரத்தில் காந்தி எந்த பங்கும் இல்லை என பேசுவதையெல் லாம் கேட்க வேண்டியுள்ளது என வேதனை தெரிவித்தார். நகர்மன்ற துணை தலைவர் ரவிக்குமார் பேசுகையில், சுற்றுலாத்தலமான உதகை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பார்க்கிங் பிரச்சனை பெரிய அளவில் உள் ளது. சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். நகராட்சி நிர்வாகம் தனிக்குழு அமைந்து உதகை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள நகராட் சிக்கு சொந்தமான மற்றும் வருவாய்த்து றைக்கு சொந்தமான நிலங்களை கண்ட றிந்து அவற்றை பார்க்கிங் பகுதிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 பேர் கொண்ட குழு அமைத்து உதகை நகராட்சி யில் 36 வார்டுகளிலும் உள்ள கான்கீரிட் நடை பாதை, சாலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை கண்டறிந்து விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் என் றார். தொடர்ந்து திமுக, அதிமுக, காங்கி ரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மன்ற உறுப்பினர் கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கு ஆணையாளர் பதில் அளித்தார்.
கொடநாடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரான சயன்
கோவை, பிப்.1- கொடநாடு கொள்ளை வழக்கின் விசாரணைக்கு பிரதான சாட்சியான சயன் வியாழனன்று சிபிசிஐடியு போலீசார் முன்பு ஆஜரானார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்த மான நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவல ராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசி ஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப் பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நபர்களி டம் விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள், செல்போன் தரவுகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் கொட நாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி யான சயனை சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிபிசி ஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். கடந்த 11 ஆம் தேதி ஆஜ ராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அன்றைய தினம் கேரள மாநிலத்தில் வேறோரு வழக்கில் சயன் ஆஜரானதால் சிபி சிஐடி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட் டது. இதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயன் வியாழனன்று விசாரணைக்கு ஆஜரா னர். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி னர். கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாகவும், செல் போன் உரையாடல்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப் பட்டதாக தெரிகிறது.
திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா
நாமக்கல், பிப்.1- மாநில நிதிக் குழு பள்ளி மேம்பாட்டு மானியம் உட் கட்டமைப்பு பணிகள் சார் பில், பள்ளிபாளையம் ஆவ ரங்காடு நகராட்சி துவக்கப் பள்ளி வளாகத்தில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட் டும் பணிக்கான துவக்க விழா நடைபெற்றது. பள்ளிபாளை யம் நாட்டான் கவுண்டன் புதூர் நகராட்சி துவக்கப்பள் ளிக்கு புதிதாக வகுப்பறை கள் கட்டும் பணி, கட்டிட பரா மரிப்புப் பணி மற்றும் 2000 லிட் டர் கொள்ளளவு கொண்ட தூண் அமைத்து குடிநீர் வசதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக் காக சுமார் ரூ.1.02 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான துவக்க நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.